Close Menu
    What's Hot

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா
    Featured

    பிரதமர் இல்லம் முன்பு தடுத்து நிறுத்தம் –  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தர்ணா

    Editor TN TalksBy Editor TN TalksJuly 21, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 Rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேர்வு முறைகேடுகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி Cockroach Janta Party (CJP) நடத்தி வரும் போராட்டம் இன்று (ஜூலை 21) இரண்டாவது நாளாகவும் ஜந்தர் மந்தரில் தொடர்கிறது.

    இந்தப் போராட்டத்துக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர். முன்னதாக அவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் முன்னேறிச் செல்லமுடியாத வகையில் பாதுகாப்பு படையினர் அவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தியதால் ராகுல்காந்தி தனது எம்.பிக்களுடன் மாணவர்களுடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

    திங்கள்கிழமை நடைபெற்ற ‘சலோ சன்சத்’ (Chalo Sansad) பேரணியின்போது போராட்டக்காரர்களுக்கும் டெல்லி போலீசாருக்கும் இடையே பல்வேறு இடங்களில் கடும் மோதல் ஏற்பட்டது. தடுப்புகளை உடைத்து முன்னேற முயன்ற போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

    போராட்டக்காரர்கள் மீது அளவுக்கு மீறிய பலத்தை போலீசார் பயன்படுத்தியதாக சிஜேபி குற்றம்சாட்டியுள்ளது. அதேநேரத்தில், போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதுடன், போலீசாரை தாக்கி அரசு சொத்துகளை சேதப்படுத்தியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த மோதலில், 118 போலீசார் மற்றும் 60 போராட்டக்காரர்கள் காயமடைந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மற்றும் வாகன சேதம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் முக்கிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிஜேபி பிரதிநிதிகள், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிடுமாறு அவர் வலியுறுத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தும் என உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    போராட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் அருகே திரண்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக சில நுழைவாயில்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

    சிஜேபி போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், ஆதிஷி, மணீஷ் சிசோடியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத், சமாஜ்வாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மற்றும் நடிகை ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய நடவடிக்கைக்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    congress party New Delhi Prime Minister's Residence Priyanka Gandhi protest rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article15 நாளில் 2 முறை எகிறிய அரிசி விலை..!! பொதுமக்கள் அதிர்ச்சி.. வறட்சி பாதிப்பு தீவிரம்!
    Next Article 1 வருஷமா ஸ்கூலுக்கு போகல.. 2 குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றிய சிங்கப்பெண் படை! வால்பாறையில் நெகிழ்ச்சி சம்பவம்!
    Editor TN Talks

    Related Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    July 21, 2026

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    July 21, 2026

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அங்கன்வாடியில் வழங்கிய முட்டையில் அழுகிய கோழிக்குஞ்சு… பெற்றோர் அதிர்ச்சி!

    பழனி கோயில் நில மோசடி வழக்கு: முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேரிடம் 6 மணி நேரம் சிபிசிஐடி விசாரணை நிறைவு!

    அமெரிக்கா- ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்த ஈரானிய தூதுக்குழு!

    “கர்நாடகா கழிவுநீரால் அழியும் தென்பெண்ணை!” – சாலையில் இறங்கிய விவசாயிகள்

    டாஸ்மாக் பார்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்.. இதெல்லாம் விற்க தடை..!! தமிழக அரசு உத்தரவு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.