திருப்பூர் மாநகரக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவரின் மனைியான ஹேமலதா, போலி வழக்கறிஞரான தனது நண்பர் நாகேந்திர குமாருடன் இணைந்து தனியார் வங்கியில் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டுள்ளார். செம்பால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட சுமாராக அரை கிலோ எடையுள்ள போலி நகைகளை அந்த வங்கியில் வைத்து இவர்கள் 52 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.

பின்னர் அந்த நகைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியே விற்க முயன்றபோதுதான் அவை முற்றிலும் போலி என்பது தெரியவந்தது. இந்தச் சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சிகரமான முறைகேடு குறித்து வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், மோசடிக்குத் துணைபோன வங்கி கிளை மேலாளர் மணி, நகை மதிப்பீட்டாளர் சதீஷ்குமார், வங்கி ஊழியர் அபினேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளரின் மனைவி ஹேமலதா ஆகிய நான்கு பேரைக் மத்திய குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போலி வழக்கறிஞர் நாகேந்திரனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த புகார்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version