தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. கடந்த ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் அர்லேக்கர் உரையுடன் தொடங்கிய இத்தொடரில், ஜூன் 19 அன்று கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்குக் கண்டனம் தெரிவித்தும், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டசபை கூடியதும், தனது 53ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் பேசியதாவது, “முதலமைச்சர் விஜய் 52-வது வயதை பூர்த்தி செய்து 53-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தூய்மையான ஆட்சிக்கு சொந்தக்காரராக விளங்கும் முதலமைச்சர் விஜய், பல்லாண்டு வாழ்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். தலைமைக்கு அழகு முதலமைச்சர் விஜய்தான் என்று மக்கள் நினைக்கிறார்கள். அரசியல் களத்தில் எதிர்கொண்ட சோதனைகளை மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக அரசியலில் புதிய சகாப்தம் படைத்து ஏழையின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்-அமைச்சர் விஜய், நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்”.
சபாநாயகரின் இந்த வாழ்த்துரையைத் தொடர்ந்து, இன்றைய பேரவை நிகழ்வில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
