Close Menu
    What's Hot

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?
    Featured

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    025 cauvery
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு இப்போது தண்ணீர் விட முடியாது என  கர்நாடகா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) கூட்டத்தில், கர்நாடக நீர்ப்பாசனத் துறை கூடுதல் செயலாளர் கவுரவ் குப்தா காணொலி வாயிலாக பங்கேற்றார். தமிழ்நாடு தரப்பில் சுப்ரியா சாகு, சுப்ரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

    கர்நாடகா தரப்பில் “ஜூன் மாதம் முழுவதும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையே பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து பூஜ்ஜியமாக இருந்தது. ஜூலை மாதத்தில் சில இடங்களில் மட்டுமே மழை பெய்ததால், அணைகளில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. பருவமழை மீண்டும் தீவிரமடையும் அறிகுறிகளும் தற்போது இல்லை.”

    மேலும், தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டுக்கு தற்போது பாசனத்துக்காக காவிரி தண்ணீர் தர வாய்ப்பில்லை என பிடிவாதம் காட்டியுள்ளது.

    இக்கூட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வழங்க வேண்டிய நிலுவை நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

     இதையடுத்து எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்ட குழு, அடுத்த கூட்டத்தை ஜூலை 28-ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளது.

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தற்போதைக்கு தண்ணீர் திறப்பு இல்லை என காவேரி மேலாண்மை ஆணையம் கைவிரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.; எனவே என்ன செய்யப் போகிறார் முதல்வர் விஜய் எனக் கேள்வி எழுந்துள்ளது.

    Cauvery Water Dispute karnataka tamil nadu Vijay Government Water Sharing
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி கோரிக்கை ஏற்பு
    Next Article தேர்தல் வழக்கில் ரகுபதிக்கு தொடரும் சிக்கல்… பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    July 22, 2026

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    July 22, 2026

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘கள்’ இறக்க அனுமதி அளிக்கப்படுமா?  – அமைச்சர் விக்னேஷ் சொல்வது என்ன?

    “கல்வி முறை சீரழிந்துவிட்டது; மாணவர்களின் 3 கோரிக்கைகளையும் ஏற்க வேண்டும்” – ராகுல் காந்தி

    வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்கு என்ன? ஐசரி கணேசனின் சகோதரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்..!

    தேர்தல் வழக்கில் ரகுபதிக்கு தொடரும் சிக்கல்… பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடையாது…  கர்நாடகா திட்டவட்டம் – என்ன செய்யப் போகிறது விஜய் அரசு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.