தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன் இரண்டாம் நாளான இன்று சட்டப்பேரவையின் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் தொடங்குகின்றன. குறிப்பாக, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி, கலைத்துறை பிரமுகர் கே. ராஜன் உள்ளிட்ட மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவித்து, பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

இரங்கல் தீர்மானத்தைத் தொடர்ந்து, நேற்று பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள அரசின் கொள்கை விளக்கங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதிப்பார்கள்.

இந்த கூட்டத்தொடர் மொத்தம் 3 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளதால், வழக்கமாக நடைபெறும் கேள்வி – பதில் நேரம் இந்த முறை இருக்காது என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது சட்டமன்ற நிகழ்வுகளில் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகிறது.

குறுகிய காலமே நடைபெறும் இந்த கூட்டத்தொடரில், அரசு முக்கிய திட்டங்கள் மற்றும் ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version