Close Menu
    What's Hot

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு

    சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»த.வெ.க ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்!. முட்டுக்கட்டை போடும் செந்தில் பாலாஜி!. போலீசாருக்கு பரபரப்பு கடிதம்!
    Featured

    த.வெ.க ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரம்!. முட்டுக்கட்டை போடும் செந்தில் பாலாஜி!. போலீசாருக்கு பரபரப்பு கடிதம்!

    Editor web3By Editor web3July 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthil balaji karur case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அது தொடர்பாக அவர்கள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், தாங்கள் எந்தவொரு குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கில் தங்களது பெயர்கள் இடம்பெறாதபோது, எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல்துறைக்கு அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி, ’35 clause(3) BNS’ பிரிவின் கீழ் தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளனர். தான் ஒரு மக்கள் பிரதிநிதி மற்றும் தொழிலதிபர் என்பதால், தனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்போது தங்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அக்கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

    இதற்கிடையில், கரூர் மாவட்டத்தில் நடந்த 41 பேர் உயிரிழப்பு விவகாரத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் தன்னைத் தொடர்புபடுத்தி மிரட்டும் தொனியில் பேசுவதாகவும், தனது ஆதரவாளர்களைக் காவல்துறை அநாவசியமாகத் துன்புறுத்துவதாகவும் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் தரப்பின் இந்த நிபந்தனைகளால் அதிருப்தி அடைந்துள்ள திருவல்லிக்கேணி போலீசார், அவர்களை விசாரணைக்கு அழைக்க ’35 clause(3) BNS’ நோட்டீஸ் வழங்குவது குறித்தோ, அல்லது நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாகக் கூறி இவர்களது முன் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றத்தை நாடுவது குறித்தோ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    police Senthil Balaji Senthil Balaji brother senthil balaji letter to police TVK Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை தலைமைச் செயலகத்தில் கஜகஸ்தான் தூதர்..!! முதல்வர் விஜய்யுடன் முக்கிய சந்திப்பு..!!
    Next Article சிப்காட் பாய்லர் வெடிப்பு: தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!
    Editor web3
    • Website

    Related Posts

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    July 14, 2026

    சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

    July 14, 2026

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     சாத்தங்குடி காதலர்கள் உயிரிழந்த விவகாரம்! நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்பினரால் தள்ளுமுள்ளு!

    ஐ.நா. உறுப்பு நாடு அங்கீகாரம்: பாலஸ்தீனத்துக்கு இந்தியா மீண்டும் ஆதரவு

    சங்கத்துல உறுப்பினரா இல்லைன்னா நடிக்க முடியாது – சின்னத்திரை நடிகர்கள் சங்கம் அறிவிப்பு!

    ” முதலில் கட்சியைக் காப்பாத்த பாருங்க…” – இபிஎஸ்-க்கு தவெக பதிலடி

    விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது தவெக அரசு – அப்பாவு குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.