Close Menu
    What's Hot

    அமெரிக்காவுக்கு உதவி செய்தால்.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    கலிபோர்னியாவில் பயங்கரம்!. மின்கம்பியில் மோதி தலைகீழாக கவிழ்ந்த விமானம்!. விமானி படுகாயம்!

    ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!
    Featured

    75,000 வாக்குச்சாவடி மையங்கள்..! 1.20லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி.. நாளை தொடங்கும் வாக்குப்பதிவு..!

    Editor TN TalksBy Editor TN TalksApril 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்த நிலையில், வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5கோடியே 73 லட்சத்து 43ஆயிரத்து 291 ஆகும். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் சுமார் 75,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 326 தேர்தல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. அத்தோடு 300 கம்பெனி துணை ராணுவத்தினரும், 1.20லட்சம் தமிழக போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பணிகளுக்காக சுமார் 3.60லட்சம் அரசு உழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவை இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்படவுள்ளது. தேர்தல் பணியாளர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பிறகு அவர்கள், அந்ததந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்றே சென்று விடுவர்.

    நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்க 1 மணி நேரத்திற்கு முன்பாகவே மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி வைக்கப்பட்டிருக்கும். அங்கு நடக்கும் வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் கமிஷன் அமைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.
    Next Article திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!
    Editor TN Talks

    Related Posts

    ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமெரிக்காவுக்கு உதவி செய்தால்.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    கலிபோர்னியாவில் பயங்கரம்!. மின்கம்பியில் மோதி தலைகீழாக கவிழ்ந்த விமானம்!. விமானி படுகாயம்!

    ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    Trending Posts

    திருச்சூரில் பட்டாசு வெடி விபத்து : 13 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது – பினராயி விஜயன்..!

    April 22, 2026

    வாக்குப்பதிவு பணிகள் விறுவிறு!. மையங்களுக்கு சென்றடையும் EVM மெஷின்கள்!.

    April 22, 2026

    அமெரிக்காவுக்கு உதவி செய்தால்.. வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 22, 2026

    கலிபோர்னியாவில் பயங்கரம்!. மின்கம்பியில் மோதி தலைகீழாக கவிழ்ந்த விமானம்!. விமானி படுகாயம்!

    April 22, 2026

    ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு.! டிரம்ப் உத்தரவால் உலக தலைவர்கள் நிம்மதி..!

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.