ஆற்றல் மிகு எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் உதயநிதி பதிவிட்டுள்ளதில், தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் – முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்க்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை வழங்கியிருக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது நன்றியை பதிவிட்டுள்ளார்.
கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி,சட்டமன்றத்திலும் – மக்கள் மன்றத்திலும் – சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம் எனவும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம் எனவும் கூறியுள்ளார்.
எதிரிக்கட்சியா இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவதாகவும், மக்களுக்கும் – அரசுக்கும் இடையிலான ஊடகமாக இருப்போம் எனவும் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தன் மேல நம்பிக்கை வைத்து மக்கள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்புக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் எனவும் கடுமையாக உழைப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
