Close Menu
    What's Hot

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»“அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?” – திமுகவுக்கு விசிக பதிலடி..!
    Featured

    “அதிகாரம் எளியவர்க்கு அதிலென்ன ஆத்திரம்?” – திமுகவுக்கு விசிக பதிலடி..!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    A Raja SS Balaji
    எஸ்.எஸ். பாலாஜி - ஆ.ராசா
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற சூழலில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கடுமையான விமர்சனம் செய்துள்ளார். இதற்கு விசிக தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எளிய மக்கள், விளிம்புநிலை சமூகத்தினர் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெற வேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் விசிக, தற்போது அந்த இலக்கை நோக்கி முக்கிய அடியெடுத்து வைத்துள்ளது. இன்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் ஐயுஎம்எல் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நடவடிக்கையை திமுகவின் ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையாகத் தாக்கினார்.

    ஆ.ராசா தனது பதிவில்,

    ”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

    மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

    வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

    முட்டுக் கொடுக்குமென்றால்;

    பூ முடித்தவனை புறந்தள்ளி —

    புணர்ச்சிக்கு வேறிடம்

    தேடுவதில் தவறில்லை!

    பெரியாரின்

    ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு

    காத்திருப்போம் ;  என்றாலும்

    களமாடுவோம் !

    வெற்றி நமக்கே!!” என்று காட்டமாக விமர்சித்தார்.

    விசிக பதிலடி

    இந்நிலையில் இந்தக் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், செய்யூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி உடனடியாகப் பதிலடி கொடுத்தார். அவர் தனது எக்ஸ் பதிவில்,

    “அதிகாரம் எளியவர்க்கு

    அதிலென்ன ஆத்திரம்

    ஆற்றாமையால் அள்ளிவீசும்

    அவதூறுகள் அசைத்திடாது

    அமைதியாய் கடப்பது

    அநாகரீகம் தவிர்க்கவே.

    அநீதி தொடர்ந்து

    அனைத்தும் உரைத்தால்

    அணைக்க முடியா

    அனலில் தகித்து போவீர்!”

    விசிக தரப்பில், ‘‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனும் முழக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளதை ஆ.ராசா சகித்துக்கொள்ள முடியாமல், வெறும் ஆற்றாமை மற்றும் அரசியல் பயத்தால் இத்தகைய அவதூறுகளை அள்ளி வீசுகிறார்’’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    மேலும், அநாகரிக அரசியலைத் தவிர்க்கும் வகையில் தற்போதைக்கு அமைதி காக்கப்படுவதாகவும், தொடர்ந்து அநீதியான விமர்சனங்கள் வைக்கப்பட்டால் விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலான உறவில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி, அதிகாரப் பகிர்வு போன்ற விவகாரங்கள் தமிழக அரசியலில் மீண்டும் மையமாகியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓய்வு பெறுகிறாரா தோனி..? போட்டுடைத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!
    Next Article நாளை திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் – சீனியர்கள் வழிவிட வேண்டும்; எதிர்பார்ப்பில் இளைஞரணியினர்!
    Editor web1
    • Website

    Related Posts

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    May 31, 2026

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    May 31, 2026

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆலங்குளம் தாக்குதல்: காவல்துறை மீது ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு!

    கோடை விடுமுறை முடிவு!. கிடுகிடுவென உயர்ந்த விமான கட்டணம்!. பயணிகள் கடும் அதிர்ச்சி!

    “அடிக்கடி வருவேன்…” பத்திரப்பதிவு துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்பு!

    May 31, 2026

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.