திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர்கள் இவர்கள்தான் என ஒரு பட்டியல் அரசியல் அரங்கில் பரபரப்பாகி வருகிறது.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், தவெக தலைவர் ச.ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதில் பெரம்பூர் தொகுதியில் 1,12,279 வாக்குகள் பெற்றார். விஜயை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஆர்.டி.சேகருக்கு 62,307 வாக்குகளும், அதிமுக கூட்டணியில் பாமகவின் திலகபாமாவுக்கு 7991 வாக்குகளும் கிடைத்தன.
இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் 19,715 வாக்குகளும் பெற்றனர்.
இந்த நிலையில், 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு வேட்பாளர் யார் என பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் கு.ப. கிருஷ்ணன் மகன் சிரஞ்சீவி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் ஆவின் சேர்மனும் தற்போதைய திருச்சி மாநகர மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும்,
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி தவெகவுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரை முன்னிறுத்தும் திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் நால்வர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்ததை குதிரைப் பேரம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அன்புமணி செய்தியாளர் சந்திப்பின்போது, திருச்சி கிழக்கில் பொது வேட்பாளரைநிறுத்துவோம் எனக் கூறியிருந்தார்.
பொது வேட்பாளராக நடிகர் கமல்ஹாசன் அல்லது சீமான் ஆகியோர் நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற பேச்சும் பரவலாக எதிர்க்கட்சியினர்
