Close Menu
    What's Hot

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பெரும் சோகம்!. ஜார்க்கண்டில் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விபத்து!. நோயாளி உட்பட 7 பேர் பலி!
    இந்தியா

    பெரும் சோகம்!. ஜார்க்கண்டில் ‘ஏர் ஆம்புலன்ஸ்’ விபத்து!. நோயாளி உட்பட 7 பேர் பலி!

    Editor web3By Editor web3February 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Air ambulance accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு மேல் சிகிச்சைக்காக ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், நேற்று (பிப்ரவரி 23) இரவு சத்ரா மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விபத்துக்குள்ளானது.

    ரெட் பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த பீச்கிராஃப்ட் C90 (Beechcraft C90) ரக விமானம், ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து இரவு 7:11 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில், அதாவது இரவு 7:34 மணியளவில் கொல்கத்தா வான்வழி கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பின்னர் சிமாரியா பகுதியில் உள்ள கசாரியா காடுகளில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த நோயாளி சஞ்சய் குமார், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா, உதவியாளர் சச்சின் குமார் மிஸ்ரா, நோயாளியின் உறவினர்களான அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார், மற்றும் விமானிகள் விவேக் விகாஸ் பகத், சவ்ராஜ்தீப் சிங் ஆகிய 7 பேரும் உயிரிழந்தனர். தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த சஞ்சய் குமாரை ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்றபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. மோசமான வானிலை மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக விமானம் பாதையை மாற்ற அனுமதி கேட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தனர். அடர்ந்த காடு மற்றும் மலைப்பகுதி என்பதால் மீட்புப் பணிகளில் கடும் சவால் நிலவியது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் ஏர் கிராஃப்ட் விபத்து விசாரணை பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியானவர்களுக்கு ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசேவா தீர்த்தத்தில் புதிய பிரதமர் அலுவலகம்!. இன்று முதல் அமைச்சரவை கூட்டம்!.
    Next Article மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்!. பிரதமர் மோடி புகழாரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    August 6, 2026

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    August 6, 2026

    அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் பணியாளர் நலன்… முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்… தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்!

    பொன்முடிக்கு பிடிவாரண்ட்… கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

    அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் பாராட்டு..! மக்கள் நலனை மையமாக கொண்டு உருவாகி இருப்பதாக பெருமிதம்..!

    அமைச்சர் புஸ்சி ஆனந்துடன் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்திப்பு… அரசியல் களத்தில் பரபரப்பு

    2.30 மணி நேர வேளாண் பட்ஜெட் வாசிப்பு… ‘புதிய திட்டமே இல்லை’.. எடப்பாடி பழனிசாமி சாடல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.