துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், அடுத்து அந்த பதவிக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், ”பதவி காலத்தில் இந்திய குடியரசுத் தலைவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமருக்கும், அமைச்சர் குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மருத்துவக் காரணங்களுக்காக தன்கர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த மாநிலங்களை தலைவராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய உறுப்பினர்கள் உள்ளனர்.

சர்ச்சைகளில் சிக்காத ஒருவர் துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி.,யான ஹரிவன்ஷ் நாராயண் சிங், மாநிலங்களவையின் துணை தலைவராக உள்ளார். அவர் 2020-ம் ஆண்டு முதல் இப்பதவியில் நீடித்து வருகிறார். அரசின் நம்பிக்கையை பெற்றுள்ள அவர், அந்த பதவிக்கு வருவதற்கான சாத்தியம் அதிகமுள்ளதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version