Close Menu
    What's Hot

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தடை..16 வயதுக்கு குறைவானோருக்கு ‛செக்’
    உலகம்

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைதளங்களுக்கும் தடை..16 வயதுக்கு குறைவானோருக்கு ‛செக்’

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    australia
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்பட பிற சமூக வலைதளங்களை பயன்டுத்த இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

    உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பலரும் சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். டிக்டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வது, யூடியூட்பில் சேனல் தொடங்கி வீடியோக்களை பதிவேற்றம் செய்வது என்று இளம் வயதினர்கள் தடம் மாறி வருகின்றனர்.

    நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் வயதினர் தங்களின் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தாமல் பலரும் சமூக வலைதளங்களால் தடம் மாறி வருகின்றனர். இதனை தடுக்க ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமிகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

    அதாவது ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தூக்கமின்மை, கவனச்சிதறல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட சிறுவர் – சிறுமிகளின் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவித்தது.

    இதனால் அதற்குள் சமூக வலைதளங்களில் சிறுவர்- சிறுமிகள் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதனை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டது. டிக்-டாக், யூடியூப், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களுக்கு இதுதொடர்பான மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதனை மீறினால் அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று வார்னிங் செய்யப்பட்டது.

    இதையடுத்து சமூக வலைதள நிறுவனங்கள் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் கணக்குகளை நீக்கும் பணியை தொடங்கியது. இந்நிலையில் தான் இன்று ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்கள் ஹேப்பியாகி உள்ளாகினர். இதுபற்றி ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

    அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ‛‛இன்று மிகவும் முக்கியமான நாள். அதேபோல் மிகவும் மகிழ்ச்சியான நாள். பெருமையான நாள். குழந்தைகளுக்கான சமூக வலைதளங்களின் தடை என்பது குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமைகளை நிலைநாட்டும் முயற்சியாகும். அதேபோல் பெற்றோர்கள் அதிக மன அமைதியை பெறுவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும்” என்றார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயூனுஸ் ஆட்சியிலும் குறையாத வன்முறை; ஒரே மாதத்தில் 789 பாலியல் வன்கொடுமைகள்!. அதிர்ச்சியூட்டும் அறிக்கை!.
    Next Article இந்தியா- தெ.ஆப்., இடையே இன்று 2வது T20 போட்டி!
    Editor TN Talks

    Related Posts

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026

    வன்முறையாக மாறிய சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டம்!. கலவர பூமியான பாரிஸ்!.

    May 31, 2026

    ஆப்கனில் சோகம்; அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 10 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    Trending Posts

    திருப்பூர் – சிதையும் டாலர் சிட்டி!

    May 31, 2026

    தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடந்தது என்ன…? போட்டுடைக்கும் ஐயுஎம்எல்

    May 31, 2026

    விஜய்யைப் பாராட்டித் தீர்மானம் …புதிய அரசியல் பயணத்துக்குத் தயாராகும் விசிக!

    May 31, 2026

    புதிய படைத் தளபதியாக பொறுப்பேற்ற ஜெனரல் ராஜா சுப்பிரமணி… பின்னணி என்ன?

    May 31, 2026

    உரிமைகளை பாதுகாக்க தவறும் ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்!- ஈரான்

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.