ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (22.06.2025) திடீரென அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதனால் அப்பகுதியில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ’ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு டெல்லி வந்தடைந்தனர்.

இதுவரை சுமார் 1,117 இந்தியர்கள் இந்துஆ வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் தமிழக மீனவர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். ’ஆபரேஷன் சிந்து’ மூலம் குமரி மீனவர்களையும் மீட்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version