Close Menu
    What's Hot

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    வாகை சந்திரசேகருக்கு ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிப்பு..!! கௌரவித்த மத்திய அரசு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»உலகம்»‘டிட்வா’ புயல் பாதிப்பால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!: பலி 150-ஐ கடந்தது
    உலகம்

    ‘டிட்வா’ புயல் பாதிப்பால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்!: பலி 150-ஐ கடந்தது

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    SL 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ‘டிட்வா’ புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது.

    இலங்கை மற்றும் அதனையொட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘டிட்வா’ புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.  கம்பளை- நுவரெலியா இடையேயான சாலை மண் சரிவால் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘டிட்வா’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால்  உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    இந்தநிலையில், ‘டிட்வா’ புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளநிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ‘டிட்வா’ புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதாகவும், புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்தநிலையில், விமானம் மற்றும் கப்பல் மூலம் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பி உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி கப்பல்கள் மூலமும், ஏசி 130ஜே விமானம் மூலமும் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ கொழும்புவில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா புறப்பட்ட விமானம், முன்னெச்சரிக்கையாக கொழும்புவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில் பயணித்த 300க்கும் மேற்பட்டவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகனமழையால் இந்தோனேஷியாவில் கடும் பாதிப்பு: 300ஐ கடந்த பலி எண்ணிக்கை!
    Next Article இந்தியா- தெ.ஆப்., இடையே இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026

    3 மாதம் நீடித்த ஈரான் – அமெரிக்க போர்!. அதிக இழப்புகளைச் சந்தித்தது யார்?

    June 15, 2026

    அடம் பிடிக்கும் இஸ்ரேல்… கேள்விக்குறியாகும் உலக அமைதி… என்னவாகும் போர் நிறுத்த ஒப்பந்தம்?  

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    FIFA World cup 2026: சவுதி அரேபியா Vs உருகுவே: 1-1 டிரா! ‘எச்’ பிரிவு பரபரப்பு உச்சம்..!!

    வாகை சந்திரசேகருக்கு ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிப்பு..!! கௌரவித்த மத்திய அரசு..!!

    FIFA World cup 2026: ஸ்பெயினை அதிர்ச்சியில் ஆழ்த்திய கேப் வெர்டே..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA World cup 2026: பெல்ஜியம் Vs எகிப்து: 1 – 1 என்ற கணக்கில் உற்சாகமான டிரா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.