ஈரானில் நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இந்திய அரசாங்கம் தனது குடிமக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உடனடியாக வெளியேறவும், மறு அறிவிப்பு வரும் வரை தெஹ்ரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும் வெளியுறவு அமைச்சகம் தனது ஆலோசனையில் வலியுறுத்தியுள்ளது.
“ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், போராட்டங்கள் அல்லது பேரணிகள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள் மற்றும் ஏதேனும் முன்னேற்றங்கள் குறித்து உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும்” என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடிமக்கள் வணிக விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய எந்தவொரு போக்குவரத்து வழியிலும் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரானில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்கள், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தையும் தயாராக வைத்திருக்குமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர தொடர்பு உதவி எண்களை வெளியிட்டுள்ளது: +989128109115; +989128109109; +989128109102; +989932179359 மற்றும் மின்னஞ்சல்: cons.tehrana.mea.gov.in. கடந்த10 நாட்களில் இரண்டாவது முறையாக வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
