நேபாளப் பகுதியில் நிலவிய சாதகமான வானிலையைப் பயன்படுத்தி, ஒரே நாளில் 274 மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையாளர்களில் இந்தியாவைச் சேர்ந்த அருண் குமார் திவாரி மற்றும் சந்தீப் ஆரே ஆகிய இரு வீரர்களும் அடங்குவர். இவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து தங்களது இலக்கை வெற்றிகரமாக எட்டினர்.

சிகரத்தை வென்று பெருமையுடன் கீழே இறங்கத் தொடங்கியபோது, ‘டெத் ஜோன்’ (Death Zone) எனப்படும் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான பகுதியில் நிலவிய கடுமையான குளிர், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் அதீத உடல் சோர்வு காரணமாக இருவரும் கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர்.

ஷெர்பா (Sherpa) மீட்புக் குழுவினர் மற்றும் வழிகாட்டிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து இவர்களைக் காப்பாற்ற நள்ளிரவிலும் தீவிரமாகப் போராடினர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இருவரும் மலையிலேயே தங்களது இறுதி மூச்சை விட்டனர்.

அண்மைக்காலமாக எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறுகிய கால வானிலை மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் மலையேறுவதால், குறுகிய பாதைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது.

இதனால், ஆபத்தான உயரங்களில் வீரர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இதுவே மலையேறுபவர்களின் ஆக்ஸிஜன் அளவு குறையவும், கடுமையான சோர்விற்கும் முக்கியக் காரணமாக அமைகிறது என நிபுணர்கள் கவலை தெரிவிப்பதோடு, இத்தகைய கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version