Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கு.. மார்க்சிஸ்ட் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம்…
    அரசியல்

    கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கு.. மார்க்சிஸ்ட் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025Updated:June 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250625 WA0009
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “இந்தியாவின் பெரிய கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி கிடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் நலன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே எங்களது கொடியை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிறுவி உள்ளோம்.

    உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் எங்களது கட்சி கொடிக் கம்பங்களை அந்தந்த மாவட்டங்களில், அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஒரு சில இடங்களில் எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி கொடிக்கம்பங்களை அகற்றி வருகின்றனர். இது எங்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது. ஆகவே, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தால்.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “அரசியல் கட்சியினரை வழக்கில் சேர்த்து கருத்துக்களை கேட்காமல் கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்டா நிலத்தில் வைத்தாலும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்கள் முறையான அனுமதி பெற்றே வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிடப்பட்டது.

    அதையடுத்து நீதிபதிகள், “தனியார் நிலத்தில் சிலை வைக்க அனுமதி தேவை இல்லை என உத்தரவுகள் உள்ளன. அவ்வாறு இருக்கையில் தனியார் நிலத்தில் கொடிக்கம்பங்களை வைக்க மட்டும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவு ஏற்கத்தக்கது அல்ல. அதோடு அரசியல் கட்சிகளை சேர்க்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதோடு, பொதுநல வழக்கில் மட்டுமே இது போல உத்தரவை பிறப்பிக்க இயலும். ஏற்கனவே இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் முதன்மை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

    இந்த வழக்கில் மனுதாரர் கோரும் நிவாரணத்திற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகளை கொண்ட அமர்வுக்கு மாற்றலாமா? என்பது தொடர்பாக முடிவு செய்ய தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கை நபர் கைது செய்யப்பட்ட விவகாரம்.. நீதிமன்றம் சரமாரிக் கேள்வி
    Next Article ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது..
    Editor TN Talks

    Related Posts

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    June 3, 2026

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    June 3, 2026

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.