அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பணியாற்றிட முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் முருகன் தலைமையில், டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார்.

அப்போது, தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். நமக்கு ஏற்பட்டது பின்னடைவு தான் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மலர்வதற்கு நாம் பாடுபட வேண்டும்.

திமுகவுடன் இருந்து மக்களை காக்க, ஜனநாயகத்தை நிலைநாட்ட புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்.புரட்சித்தலைவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதி கோட்டை பக்கம் செல்ல முடியவில்லை.

புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு எத்தனையோ சோதனைகளை வேதனைகளை தாண்டித்தான் இந்த இயக்கத்தை அம்மா கட்டிக் காத்தார். அம்மாவின் மறைவுக்கு பின்பு எடப்பாடியார் இந்த இயக்கத்தை பல சோதனைகளை தாண்டி தான் கட்டிக் காத்தார்.

ஏற்கனவே 196 சட்டமன்ற தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் 234 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து கடுமையாக தேர்தல் பணி ஆற்றினார்.

திமுக பல மாநாடுகளை நடத்தியும் தோல்வி கண்டுள்ளது. நமக்கும் திமுகவுக்கும் குறைந்த அளவு தான் வாக்கு வித்தியாசம்.

இன்றைக்கு அதிமுகவின் எதிர்காலத்தை பற்றி விஜய் நிர்ணயிருப்பது வேதனையாக உள்ளது. பொதுவாக ஒரு கட்சி தலைவரை முதலமைச்சர் சந்திப்பு மரபு ஆனால்  அந்த மரபை உடைத்துள்ளார் விஜய்.

அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடியாரை  சந்தித்திருக்க வேண்டும் ஆனால் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை பதவி ஆசையை தூண்டி அவர்களை சந்தித்துள்ளார்.

அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் டி.வி.கே. தோல்வி அடைந்துள்ளது. இன்றைக்கு திமுக கூட்டணி தயவில் தான் ஆட்சியை விஜய் நடத்துகிறார்.

இதுதான் தூய ஆட்சியா? விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற குதிரை பேரத்தை நடத்துகிறார்.

அமைச்சர் பதவி ஏற்க்கும்போது சிலர் அம்மா படத்தை வைத்திருந்தனர் இவர்கள் அம்மா ஆட்சி என்று சொல்ல முடியுமா. இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளது என்ற ஆதங்கத்தில் விஜய் உள்ளார் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை மந்திரி பதவி தருகிறேன் என்று தூண்டில் போட்டு மீன் பிடிக்க விஜய் நினைக்கிறார்

இன்றைக்கு அந்த அதிமுக உறுப்பினர்கள் தேர்தலில் நிற்க எடப்பாடியார் தான் படிவத்தில் கையெழுத்து இட்டுள்ளார் .

தற்போது விஜய்க்கு மெஜாரிட்டி இல்லை. திமுக கூட்டணி கட்சி தயவில் தான் உள்ளார் அதனால் தனது ஆட்சியை காப்பாற்ற குதிரை பேரத்தை நடத்துகிறார். இந்த அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

தற்போது அதிமுகவுக்கு சோதனை காலம் அதில் நிச்சயமாக மீண்டு எழுந்து மீண்டும் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலரும் என கூறினார்.

கூட்டத்தில், அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற உழைத்த கழக  பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு நன்றி தெரிவிப்பது, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடியார் தொடர்ந்து பணியாற்றிட முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும்  வழங்குவது ஆகிய 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version