தமிழகத்தில் தவெக விரைவில் ஆட்சி அமைக்கும் என்றும் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவை கடந்த 5-ம் தேதி உடன் முடிவடைந்த நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டதாக துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதனை ராஜ் நிவாஸில் நேரில் சந்தித்து வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்திருப்பதாகக் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்து ஆட்சி அமைக்க உரிமை கோறும் கடிதம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி மிக விரைவில் அமையும் எனக் கூறிய ரங்கசாமி, தவெக தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version