Close Menu
    What's Hot

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»லார்ட்ஸ் டெஸ்டில் வரலாறு படைக்குமா இந்தியா? வெற்றியை நோக்கி வீறுநடை போடும் இந்திய மகளிர் அணி!
    விளையாட்டு

    லார்ட்ஸ் டெஸ்டில் வரலாறு படைக்குமா இந்தியா? வெற்றியை நோக்கி வீறுநடை போடும் இந்திய மகளிர் அணி!

    Editor web1By Editor web1July 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    D
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி தனது அபாரமான ஆட்டத்தால் வரலாற்று வெற்றியை நோக்கித் தடம் பதித்துள்ளது.

    வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதன், மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்துத் தவித்து வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்ற நிலையில், போட்டியின் இறுதி நாளான இன்று (ஜூலை 13) இந்தியா வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான யாஸ்திகா பாட்டியா அபாரமாக விளையாடி சதமடித்தார். இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் சர்வதேச பெண் கிரிக்கெட் வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையை யாஸ்திகா பாட்டியா (113 ரன்கள்) படைத்தார். மேலும், டெஸ்ட் போட்டியின் 3-வது அல்லது 4-வது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

    அவருக்குத் துணையாகத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 70 ரன்களும், இறுதிப் பகுதியில் அதிரடி காட்டிய ரிச்சா கோஷ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் டிக்ளேர் செய்தார். முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து, இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்தியப் வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்தின் டாப் ஆர்டரைச் சரித்தனர்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 130 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article30 நாட்கள் சிறையில் இருந்தால் நிரந்தர தகுதி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!
    Next Article விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த ஜானிக் சின்னர்..!
    Editor web1
    • Website

    Related Posts

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : சாம்பியன் பட்டத்தை தக்க வைத்த ஜானிக் சின்னர்..!

    July 13, 2026

    சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா!. 

    July 12, 2026

    லார்ட்ஸில் வரலாறு படைத்த கிராந்தி கௌட்!. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய தங்கத் தேரோட்டம்: அமைச்சர்கள் வடம் பிடித்துத் இழுத்து துவக்கி வைத்தனர்!

    புதுப்பொலிவுடன் வெளியாகும் ஐ.ஆர்.சி.டி.சி..! விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு..!

    பொன்னேரி அருகே பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: கரும்புகையுடன் எரிந்த தீயால் பரபரப்பு!

    எழுத்தாளர் பூமணி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

    வயநாடு கல்லாடி நிலச்சரிவு: மாயமான இமாச்சலப் பிரதேச நபரின் உடல் மீட்பு – தேடுதல் பணி நிறைவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.