Close Menu
    What's Hot

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள்: சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம்!
    தமிழ்நாடு

    தமிழக கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள்: சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250625 WA0015
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசின் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் அல்லது டேப்லெட்டுகள் வழங்கும் திட்டத்திற்காக, டெல், ஏசர், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றன.

    தமிழக அரசின் பட்ஜெட்டில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கையடக்க கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனைச் செயல்படுத்தும் விதமாக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை வெளியிட்டது.

    மடிக்கணினியின் அம்சங்கள் மற்றும் டெண்டர் விவரங்கள்

    மடிக்கணினியில் இருக்க வேண்டிய அம்சங்களாக, 8 ஜிபி ரேம் (DDR-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (SSD), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது AMD பிராசஸர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720p ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், மடிக்கணினிகளில் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இடம்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெண்டர் வரும் ஜூலை 9 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், டெண்டருக்கு முந்தைய கூட்டத்தில் டெல், ஏசர், லெனோவா, ஹெச்பி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், நிறுவனங்கள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு எல்காட் நிறுவனம் தெளிவான பதில்களை அளித்துள்ளது.

    ஒரு நிறுவனம் டெண்டரைச் சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியது. ஆனால், ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டதால், மேலும் கால அவகாசம் அளிக்கப்படாது என எல்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திட்டமிட்டபடி ஜூலை 9 ஆம் தேதி டெண்டர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக கல்லூரி மாணவர்கள் விரைவில் அதிநவீன மடிக்கணினிகளைப் பெற்று பயன்பெறுவார்கள்.

    Acer College Students Dell Digital Education Elcot HP International Companies Laptop Scheme Lenovo Tablet Tamil Nadu government Tender எல்காட் ஏசர் கல்லூரி மாணவர்கள் டிஜிட்டல் கல்வி டெண்டர் டெல் டேப்லெட் தமிழக அரசு பன்னாட்டு நிறுவனங்கள் மடிக்கணினி திட்டம் லெனோவா ஹெச்பி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடிப்படை வசதிகோரி ஆர்பாட்டம் செய்யும் சட்டக்கல்லூரி மாணவிகள்.. ஆதரவு தெரிவித்துள்ள அண்ணாமலை..
    Next Article வெளியானது கூலி படத்தின் முதல் பாடல்… Super Star ரஜினி எங்கே? முழுக்க முழுக்க அனிருத்…
    Editor TN Talks

    Related Posts

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    July 18, 2026

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    July 18, 2026

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்..!! வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம்-1..!!

    புதுக்கோட்டை: மாநகராட்சி குளங்களில் 15,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்!

    பெரம்பலூர் : மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து தீப்பிடிப்பு..! 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்பு..!

    சிதம்பரம்: மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடக்கம்!

    125 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் கட்டாய வசூல் புகார்: ‘கட்சி நிதி’ கேட்டு மிரட்டல்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.