Close Menu
    What's Hot

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பேரவையில் புதிய நடைமுறை!. முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் உரையின் அம்சங்கள்!
    தமிழ்நாடு

    பேரவையில் புதிய நடைமுறை!. முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் உரையின் அம்சங்கள்!

    Editor web3By Editor web3May 12, 2026Updated:May 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cm vijay jcd prabhakar speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்களுக்கான இருக்கைகள் இன்று முறைப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின்  ஆட்சி அமைய ஆதரவு அளித்த காங்கிரஸ், விசிக, சிபிஐ (CPI) மற்றும் சிபிஎம் (CPM) ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுங்கட்சி வரிசையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று அனைவரும் பதவியேற்ற நிலையில், இன்று புதிய சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    இதனை தொடர்ந்து புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசிய முதல்வர் விஜய், ஜனநாயக மாண்புகளை வலியுறுத்தி உரையாற்றினார். “சட்டப்பேரவையில் அனைவரும் சமம். ஒரு கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் இருந்தாலும், அவரது கருத்துக்கும் உரிய மதிப்பளிக்கப்படும்” என உறுதியளித்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி சிறு மற்றும் பெரிய கட்சிகளின் கருத்துக்கள் சமமாக எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் காக்கும் மிகப்பெரிய பொறுப்பு சபாநாயகருக்கு இருப்பதாகவும், சட்டமன்ற நடவடிக்கைகள் சீராகவும் செம்மையாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குவோம் என்றும் விஜய் குறிப்பிட்டார்.

    இதனை தொடர்ந்து உரையாற்றி வரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதல்வரின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார். “இப்படி ஒரு முதலமைச்சரா என ஒட்டுமொத்த தமிழகமே வியந்து பார்க்கும் வகையில் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளன. தவெக ஒரு புதிய சக்தியாக, பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது” என்றார்.

    சாதி, மதம் எனப் பாராமல் சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற விஜயால் மட்டுமே முடியும் என மக்கள் நம்பி வாக்களித்துள்ளனர். “இது வெறும் தேர்தல் வெற்றி மட்டுமல்ல; தமிழகத்தில் வீசும் விஜய் அலை, வெற்றி அலை, மற்றும் மக்களின் விசில் அலை” என உற்சாகமாகப் பேசி தனது நன்றியினைப் பதிவு செய்தார்.

    தொடர்ந்து உரையாற்றி வரும் சபாநாயகர், “தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்து, மக்கள் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம்” என்று அழைப்பு விடுத்தார், மேலும், தான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் சார்பின்றி நடுநிலையோடு அவையை வழிநடத்துவேன் என உறுதி அளித்தார். மேலும், அவையில் வெறும் கூச்சல் குழப்பங்களுக்கு இடமளிக்காமல், தரமான மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு அதிக ஊக்கமளிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    சட்டமன்ற உறுப்பினர்களின் பொறுப்பை நினைவூட்டிய சபாநாயகர், “சட்டமன்றம் என்பது மோதலுக்கான களம் அல்ல; மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தளம். அந்த நோக்கத்திற்காகவே மக்கள் நம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார். தனது உரையில் முதல்வர் விஜய்யின் அரசியல் எழுச்சியைக் குறிப்பிட்ட அவர், தமிழக மக்கள் தற்போது முதல்வர் விஜய்யை மறைந்த மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆராகவே பார்க்கின்றனர் எனப் புகழாரம் சூட்டினார்.

    தமிழக அரசியல் வரலாற்றில் எடுத்த எடுப்பிலேயே அரியாசனத்தில் அமர்ந்து முதல்வர் விஜய் சாதனை படைத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜேசிடி பிரபாகர், இது எதேச்சையாக நடந்ததல்ல என்றும், அவர் நீண்டகாலமாக மக்களோடு மக்களாகக் களத்தில் நின்று பணியாற்றியதற்குக் கிடைத்த வெற்றி என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் வெள்ளி!. ரூ.15,000 உயர்வு!.
    Next Article நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தவெக MLA-வுக்கு தடை!. சென்னை ஐகோர்ட்!
    Editor web3
    • Website

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    Trending Posts

    எனக்கு நடந்தது பிளாக்மெயில் திருமணம்; மூன்றெழுத்து நடிகை என் குடும்பத்தை கெடுத்தார்!. ரவி மோகன் உருக்கம்!

    May 16, 2026

    தவெக அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு!. யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கீடு?

    May 16, 2026

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    அரசு கஜானாவை ஆளும் KAS!. 50 ஆண்டு அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த ‘நிதித்துறை’ அங்கீகாரம்!.

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.