2026 தேர்தலையொட்டி டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் மல்லிக அர்ஜுனா கார்கே தலைமையில் தமிழ்நாடு எம் எல் ஏ மற்றும் எம் பிக்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை 4 மணி க்கு நடைபெறவுள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தமிழ் நாடு சட்டமன்ற குழுத்தலைவர் ராஜேஷ்குமார், சூரஜ்ஹெகுடே,நிவேதித் ஆல்வா,
ஆகியோர் முன்னிலையில் தமிழ் நாட்டின் காங்கிரஸ் எம் எல் ஏக்கள், எம் பிக்கள் உட்பட அனைவரும் கட்டாயம் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

https://x.com/manickamtagore/status/2012366600373141994

இந்த கூட்டத்திற்கு செல்வதற்கு முன் மாணிக்கம் தாக்கூர் போட்ட பதிவுதான் தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அவரது எக்ஸ் தள பதிவில், இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல.. என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதாற்காக .. அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்.. இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல .. நம் உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல.. மதவெறி கும்பல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல. நட்புக்கு தோள் கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம் . என்று பதிவிட்டுள்ளார். இதனால், கூட்டணி கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version