Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம்: கோவையில் பதுங்கியுள்ளாரா புகாரளித்த நிகிதா!
    தமிழ்நாடு

    திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம்: கோவையில் பதுங்கியுள்ளாரா புகாரளித்த நிகிதா!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025Updated:July 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250704 WA0005
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித் குமாரின் (27) மரணம் தொடர்பாகப் புகாரளித்த நிகிதா, கைது அச்சத்தில் கோவை மாவட்டத்தில் தஞ்சமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் கோவையில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியில் காணப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

    அஜித் குமார் மரணம்: சம்பவம் ஒரு பார்வை

    கடந்த ஜூன் 27-ம் தேதி, மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். தனது காரை ‘பார்க்கிங்’ செய்யும்படி அஜித் குமாரிடம் சாவியைக் கொடுத்திருக்கிறார். அஜித் குமாருக்கு கார் ஓட்டத் தெரியாததால், மற்றொருவரின் உதவியுடன் காரைப் பார்க்கிங் செய்துவிட்டு, சாவியை நிகிதாவிடம் திருப்பி அளித்துள்ளார்.

    சாமி கும்பிட்டுவிட்டு, நிகிதா காரில் ஏறியபோது, தனது பையில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.2,200 காணாமல் போனதைக் கண்டார். இதுகுறித்து நிகிதா அளித்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீஸார் அஜித் குமார் உட்பட 5 பேரிடம் விசாரித்துள்ளனர். மற்றவர்களை விடுவித்த நிலையில், அஜித் குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் வெளியே அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஜூன் 28-ம் தேதி, போலீஸார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அஜித் குமாரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    நிகிதா மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் புதிய தகவல்கள்

    அஜித் குமார் மரணத்திற்கு நிகிதாதான் முக்கிய காரணம் என்றும், ஒரு உயர் அதிகாரியின் தூண்டுதலின் பேரில்தான் போலீஸார் தாக்கி அஜித் குமார் உயிரிழந்தார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    இந்நிலையில், நிகிதா மீது பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் உள்ளதாகவும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்து வருவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸார் தன்னைக் கைது செய்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில், நிகிதா ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் எங்கும் ஓடவில்லை அல்லது ஒளியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    கோவையில் நிகிதா மற்றும் காவல்துறை அலட்சியம்?

    இன்று காலை, கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல தேநீர் விடுதியில் நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்ததைக் கண்ட ஒருவர், தனது செல்போனில் அந்தக் காட்சிகளைப் பதிவு செய்து போலீஸாருக்குத் தகவல் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் சிறிதும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் அங்கு அமர்ந்திருந்த நிகிதா, பின்னர் கோவையை நோக்கி காரில் சென்றுள்ளதாகத் தெரிகிறது. தற்போது நிகிதா தேநீர் கடையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகின்றன

    Ajith Kumar Coimbatore Custodial death Dowry case Judicial custody Madurai Nikita police investigation Sivaganga Thiruppuvanam அஜித் குமார் காவல் மரணம் காவல்துறை விசாரணை கோவை சிவகங்கை திருப்புவனம் நிகிதா நீதிமன்றக் காவல் மதுரை வரதட்சணை வழக்கு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலாக் அப் மரணங்களுக்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.. நடிகை குஷ்பூ!
    Next Article பசிலிக்காவாக அறிவிக்கப்பட்ட பரங்கிமலை புனித தோமையார் திருத்தலம்: சபாநாயகர் அப்பாவு பெருமிதம்
    Editor TN Talks

    Related Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    February 15, 2026

    அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர் உயிரிழப்பு!. 6 நாட்களுக்குப் பிறகு உடல் கண்டெடுப்பு!

    February 15, 2026

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    February 15, 2026

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.