Close Menu
    What's Hot

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»லாக் அப் மரணங்களுக்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.. நடிகை குஷ்பூ!
    தமிழ்நாடு

    லாக் அப் மரணங்களுக்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்.. நடிகை குஷ்பூ!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 4, 2025Updated:July 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250704 WA0004
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் லாக்-அப் மரணங்கள், வரதட்சணை கொடுமைகள், மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து தனது கவலைகளைத் தெரிவித்தார். இந்த விவகாரங்களில் முதலமைச்சர் நேரடியாகப் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

    லாக்-அப் மரணங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு

    லாக்-அப் மரணங்கள் அதிகரித்து வருவது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதைக் காட்டுவதாக குஷ்பு தெரிவித்தார். பொதுமக்களுக்குக் காவல்துறை தரும் தொந்தரவுகளை முதலமைச்சர் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கு முதலமைச்சரின் கீழ் தான் வரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிபிஐ-க்கு வழக்குகள் மாற்றப்பட்ட பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது திமுக அரசின் தோல்வியையே காட்டுவதாகவும், இதற்கு முதலமைச்சர் தான் பொறுப்பேற்றுப் பதிலளிக்க வேண்டும் என்றும் குஷ்பு வலியுறுத்தினார்.

    வரதட்சணை கொடுமை மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு

    லாக்-அப் மரணங்கள் மட்டுமின்றி, வரதட்சணை கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கவலையளிப்பதாக குஷ்பு கூறினார். வரதட்சணை வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் தவறு என்று அவர் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். “பெண் குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்றால் வரதட்சணை கொடுக்க வேண்டாம். வரதட்சணை வாங்கவில்லை என்றாலும் ஆசையாகப் பொருட்கள் தர வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார். பெண்ணிற்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டால், அவர்களுக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்றும், “2 பெண் குழந்தைகளின் தாயாகச் சொல்கிறேன், எப்போதும் எனது குழந்தைகளாக இருப்பார்கள்; அதன் பிறகே கணவருக்கு மனைவி. ஒரு பிரச்சனை என்றால் வாய் திறந்து பேசுங்கள். லாக்-அப் சாவு, வரதட்சணை கொடுமை போன்றவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றும் குஷ்பு உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.

    போதைப்பொருள் ஒழிப்பு

    போதைப்பொருள் விவகாரம் குறித்துப் பேசிய குஷ்பு, அதைச் சினிமா துறையில் மட்டும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறினார். பள்ளி, கல்லூரி உள்பட எல்லா இடங்களிலும் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாகவும், சினிமாவில் இருவர் பாதிக்கப்பட்டதால் உடனே அதிகமாகிவிட்டது என்று கூறுவது சரியல்ல என்றும் தெரிவித்தார். சினிமாவில் நடிப்பதால் சூப்பர் ஹீரோ கிடைத்துவிடாது என்றும், அவர்களும் சராசரி மனிதர்கள் என்பதால் போதைப் பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். “இதை எப்படித் தடுக்க வேண்டும் என்ற வழியைப் பார்க்க வேண்டும். ஆனால் பிரச்சனைகளைத் தீர்க்க வழி பார்க்காமல் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார். கொக்கைன், கஞ்சா மட்டுமின்றி ஊசி மூலமும் போதை உட்கொள்ளும் நிலை இருப்பதாகவும், போதைக்கு அடிமையானவர்களை எப்படி மீட்பது என்ற வழியைப் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் திமுக பின்வாங்கியதை நினைவுபடுத்திய குஷ்பு, சினிமாவை மட்டும் குறை சொல்லக் கூடாது என்றும் கூறினார்.

    Actress Khushbu Chennai Airport Chief Minister DMK government Dowry harassment Drug abuse Law and Order Lock-up deaths Police accountability Women's safety காவல்துறை பொறுப்புடைமை சட்டம் ஒழுங்கு சென்னை விமான நிலையம் திமுக அரசு நடிகை குஷ்பு பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் முதலமைச்சர் லாக்-அப் மரணங்கள் வரதட்சணை கொடுமை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅஜித் குமார் படுகொலை வழக்கு: சாட்சிகளுக்கு துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்.. தொல்.திருமாவளாவன்!
    Next Article திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் குமார் மரணம்: கோவையில் பதுங்கியுள்ளாரா புகாரளித்த நிகிதா!
    Editor TN Talks

    Related Posts

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    May 19, 2026

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    May 19, 2026

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள்; கூட்டுறவு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.