Close Menu
    What's Hot

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக எம்.பி.,யும், எம்.எல்.ஏ.,வும் பொது மேடையில் குழாயடி சண்டை… அதுவும் ஆட்சியர் முன்னிலையில்… என்ன நடந்தது?
    தமிழ்நாடு

    திமுக எம்.பி.,யும், எம்.எல்.ஏ.,வும் பொது மேடையில் குழாயடி சண்டை… அதுவும் ஆட்சியர் முன்னிலையில்… என்ன நடந்தது?

    Editor TN TalksBy Editor TN TalksAugust 2, 2025Updated:August 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும்,
    எம்எல்ஏ.மகாராஜனும் அரசு பொது நிகழ்ச்சி மேடையில் ஆட்சியர் முன்னிலையில் “போடா வாடா” என்று பேசி குழாயடி சண்டையிட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் , திமுக தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் , ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் பெயரிலேயே இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தில் சார்பில் விபத்து நிவாரண தொகைக் கான ஆணையை தேனி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டபோது, அந்த ஆணையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்.பி.கையில் இருந்து பறித்து ”இது நான் வாங்கி கொடுத்தது, நான் தான் கொடுப்பேன்” என பொதுமக்கள் முன்னிலையில் பறித்து பயனாளிக்கு கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து “போடா முட்டா பயலே”என்று கலெக்டர் முன்னிலையிலேயே பகிரங்கமாக கூறினார். தனது தொகுதியில், தொகுதி மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மேடையிலேயே கூறியதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ மகாராஜன் “யாரைப் பார்த்து டா முட்டாப் பயலே சொல்ற” ராஸ்கல் தொலைச்சிருவேண்டா”என்று தங்கதமிழ்செல்வனை பார்த்து சீறினார்.பெண்கள் குழாயடி சண்டை போடுவதைப் போல திமுக எம்.பி.யும், திமுக எம்எல்ஏவும் சண்டையிடுவதை பார்த்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பதறிப்போனார்.உடனடியாக சுதாரித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி நன்றி உரை கூறி வேகமாக நிகழ்ச்சியை முடித்து வையுங்கள் என்று தெரிவித்து அவசர அவசரமாக முடித்து வைத்தனர்.

    ஏற்கனவே நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் என யாரும் கலந்து கொள்ளாமல் காலி சேர்களுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏ யும் பொதுமக்கள் முன்னிலையில் “போடா வாடா” சண்டையில் ஈடுபட்டதால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள் ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என்று கவலைப்படும் விதத்தில் அரசு நிகழ்ச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் என்பதையும் மறந்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    DMK FUNCTION STAGE MLA MAHARAJAN MP Thanga Tamilselvan politics tamilnadu அரசியல் எம்.எல்.ஏ எம்.பி. எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு திமுக தேனி மகாராஜன் விழா மேடை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி… அன்புமணி மீது ராமதாஸ் குற்றச்சாட்டு…
    Next Article இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக பறிக்கப் போகிறது… அன்புமணி ராமதாஸ் கண்டனம்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    கோவையில் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக் கூட்டம் – பங்கேற்காத தவெக அமைச்சர்கள்

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    மாற்றுத்திறனாளி தடகள வீரர் சுட்டுக் கொலை..! சக வீரர் பகீர் வாக்குமூலம்..!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு… தேமுதிக கடும் விமர்சனம்!

    May 31, 2026

    விஜய் துணை முதலமைச்சர் பதவியே தந்திருப்பார் ; ஐசியூவில் அதிமுக – பிரேமலதா தில்

    May 31, 2026

    டெண்டர் வெளியிடும் முன் 3 கட்ட ஆய்வு கட்டாயம்: மின்வாரியம் அதிரடி உத்தரவு!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.