இந்தியர்களின் உணர்வோடு கலந்து போன ஒரு நிதி பாதுகாப்பாக தங்கம் விளங்கிவருகிறது. திருமணம், விழா, சேமிப்பு, முதலீடு என எத்தனை பெயர் சொன்னாலும், அதன் மதிப்பு எப்போதும் உயர்ந்ததே. ஆனால் கடந்த சில வாரங்களில் தங்கம் விலை நித்தம் நித்தம் மாறிக்கொண்டே இருப்பது சாதாரண மக்கள் முதல் நகை வியாபாரிகள் வரை அனைவரையும் பதட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.11) சற்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.10) ரூ.96,240க்கு விற்பனையான நிலையில், இன்றும் ரூ.160 உயர்ந்து ரூ.96,400க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.12,050க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.240, இன்று ரூ.160 என 2 நாட்களில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.209 ஆகவும் ஒரு கிலோ ரூ.9,000 உயர்ந்து ரூ,2,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேல் ஆபரண தங்கத்தின் விலை ரூ.96000க்கு கீழ் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version