பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்​டிகள் வெகுவிமரிசையாக நடைபெறும், இன்​னும் ஒரு மாதமே உள்ள நிலை​யில் கிராமங்​களில் ஜல்லிக்கட்டு காளை​களுக்கு அதன் உரிமை​யாளர்​கள் பிரத்​யேக பயிற்​சிகள் அளித்து தயார் செய்து வரு​கிறார்​கள். இதேபோல், மதுரை மாவட்​டம் அலங்​காநல்​லூர், பாலமேடு மற்​றும் அவனி​யாபுரத்​தில் நடை​பெறும் ஜல்லிக்கட்டுப் போட்​டிகள் உலகப் புகழ்​பெற்​றவை. இப்​போட்​டிகளின்​போது வாடி​வாசல்​களில் காளை​களை அவிழ்ப்​ப​தையே ஜல்​லிக்​கட்டு ஆர்​வலர்​கள் பெரு​மை​யாக கருதுகின்​றனர். இந்தநிலையில், பொங்கல் மற்றும் தமிழா் திருவிழாவையொட்டி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை செயலா் சுப்பையன் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஆட்சியா்களிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு உள்பட எந்த போட்டிகளையும் நடத்தக் கூடாது. விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு இணங்க போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.

காளைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது, விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version