தவெக தலைவர் விஜய் முதலில் பொதுவெளிக்கு வந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த வேண்டும் என்று அதிமுக குறித்தான விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி அடங்கி அறிவிப்புகள் வெளியான நிலையில், இன்று இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறாத நாளே இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் தமிழகம் தலைத் தொங்கி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.

அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்திருப்பதாகவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.

அதிமுக மீது குறை சொல்வதற்கு, திறமையற்ற பொம்மை முதலமைச்சர் இடம் எந்த சான்றும் இல்லை என்றும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார்.

கொரோனா பேரிடர் காலத்தில் வரி வருவாய் இல்லாத போதே சிறப்பாக ஆட்சி நடத்திய அதிமுக, வரி வருவாய் உள்ள காலத்தில் திறமையாக ஆட்சி நடத்தி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என தெரிவித்தார்..

கொடநாடு விவகாரத்தில் ஜெ ஆத்மா எடப்பாடி பழனிச்சாமி துரத்தும் என தெரிவித்த மனோஜ் பாண்டியன் கருத்திற்கு , மனோஜ் பாண்டியனுக்கு ஆன்மா துரத்தியதால்தான் அவர் திமுகவுக்கு சென்று விட்டார் போல …

அதிமுகவுக்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களெல்லாம் அதிமுகவிலிருந்து துரத்தி விடப்பட்டவர்கள் என தெரிவித்தார். மேலும் தவெக தலைவர் விஜய் அதிமுகவை ஊழல் கட்சி என குறிப்பிட்டது குறித்து பேசிய அவர் விஜய் முதலில் பொதுவெளியில் வர வேண்டும் .. அவருக்கு ஒன்றும் தெரியவில்லை ,

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தான் தலைமை தாங்குகிறது என்பதை பல தடவை உறுதிப்படுத்தி விட்டோம் , விஜயை முதலில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டார் .

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version