Close Menu
    What's Hot

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு… புதிய திருப்பம்… நிகிதா பொய் புகார் அளித்தாரா?…
    தமிழ்நாடு

    சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு… புதிய திருப்பம்… நிகிதா பொய் புகார் அளித்தாரா?…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 7
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கையில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் காளி கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். கோயிலுக்கு வருகை தந்த நிதிகா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்க, அதனடிப்படையில் தனிப்படை போலீசார் அஜித்குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அதேப் போல், அஜித்குமார் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்டதோடு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஐக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டிருந்தார்.

    சிபிஐ தரப்பில் விசாரணை அதிகாரியாக டெல்லியை சேர்ந்த மோகித் குமார் என்பவர் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தலைமையிலான போலீசார் இந்த வழக்கு விசாரணையை கடந்த 14-ம் தேதி தொடங்கினர். தனிப்படை காவலர்களிடம் விசாரணை முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். 5 பேரையும் 13-ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அத்தோடு, இந்த வழக்கு விசாரணை அறிக்கையை
    வரும் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த வழக்கில் புகார் தெரிவித்த நிகிதாவின் கார் கோயில் பார்க்கிங்கை விட்டு வெளியே செல்லவில்லை என சிபிஐ விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொகொயிலில் இருந்து கார் எங்குமே செல்லாத நிலையில், அஜித்குமார் மீது நிகிதா பொய் புகார் அளித்து இருக்கலாம் என சிபிஐ சந்தேகம் எழுப்பியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகன்னியாகுமரி : அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமனம்… 3 பேர் கைது…
    Next Article ஆர்ஜூன் தாஸின் ’ரசவாதி’ திரைப்படம்… மேலும் ஒரு சர்வதேச விருது…
    Editor TN Talks

    Related Posts

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    June 2, 2026

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    June 2, 2026

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உச்சநீதிமன்ற வரலாற்றில் பொன் நாள்..!! 5 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு..!!

    ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுகிறதா காங்.,? முதல்வர் விஜய்யை சந்தித்தார் ப.சிதம்பரம்..!!

    புலி பட விவகாரம்..!! முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி..!! சென்னை ஹைகோர்ட் அதிரடி..!!

    மனு கொடுக்க குவிந்த மக்கள்… வெளியே வந்த முதல்வர் மனுப் பெட்டி!

    3 இடங்களில் ரேடார் கருவிகள்.. தொடர் கண்காணிப்பு..!! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.