திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே இயங்கும் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரம் வரை அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன், நெல்லை வழியாக பயணித்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் மார்க்கமாக தாம்பரம் வந்தடைகிறது.
11 ஸ்லீப்பர் பெட்டிகள், 8 முன்பதிவில்லா பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டிகள், ஒரு உணவுக்கூட பெட்டி என 22 பெட்டிகள் உள்ளன. அம்ரித் பாரத் ரயில் சேவைக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தென்னகவே ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் நாகர்கோவில் – மங்களூரு, திருவனந்தபுரம் – சர்லப்பள்ளி வழித்தடங்களில் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. திரிச்சூர் – குருவாயூர் இடையேயான பயணிகள் விரைவு ரயில் சேவையையும் திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
