தமிழக முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திரைப்பட இயக்குனர் சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோர் தங்களது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினர்.

சென்னையில் நீலாங்கரை இல்லத்தில் முதலமைச்சர் விஜய்யை திரைப்பட இயக்குனர் சுந்தர் சி, அவரது மனைவி நடிகை குஷ்பு ஆகியோர் சந்தித்தனர். அப்போது, தங்கள் மகள் மற்றும் ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினர்.

இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத நாள்! எங்களது அன்பிற்குரிய சகோதரரும், தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சருமான திரு. @actorvijay அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகள் மற்றும் திரு. ஷ்ரவண் ஸ்ரீனிவாசன் ஆகியோரின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினோம்.

​அவரைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் இதயம் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிறைகிறது. குழந்தைகள் அனைவரும் மிகுந்த உற்சாகமடைந்து, அவரிடமிருந்து தங்கள் கண்களை எடுக்கவே இல்லை. தனது பிஸியான பணிச்சுமைக்கு இடையிலும், எப்பொழுதும் போல அதே பாசம், அரவணைப்பு மற்றும் அழகான புன்னகையோடு எங்களை வரவேற்றார்.

​உங்கள் பொன்னான நேரம், அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி சகோதரா! இதன் மதிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

​எப்பொழுதும் உங்கள் மீது அன்புடன்!..

இவ்வாறு தனது பதிவில் குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version