தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே காலை முதலே அரசியல் தலைவர்கள் பலரும் வாக்களித்து வருகிறார்கள்.
அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள SIET கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தியுள்ளார். குடும்பத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்த அவர், வரிசையில் நின்று வாக்களித்தார். இவருடன் உதயநிதி, கிருத்திகா, இன்பன் உதயநிதியும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தமிழ்நாடு வெல்லும் என்றார்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
