இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”தூத்துக்குடியில் நேற்று இளம் பெண் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்டதுடன் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் அவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. தவெக ஆட்சியில் அமர்வதற்கு முன்னர் நித்தமும் தமிழத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றி பக்கம் பக்கமாக கண்டன அறிக்கைகளை பதிவு செய்து விட்டு தற்போது ஆட்சிக்கு வந்த பின்னரும் இவர்களது ஆட்சியிலும் அதே நிலைமை தொடர்வது ஆட்சி நிர்வாகத்தின் தோல்வியையே எதிரொலிக்கிறது.
முதல்வர் விஜய் அவர்கள் ஆட்சியிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த தமிழக சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கிறது. துறையின் பெயர் தெரியாத அமைச்சர்களும், குற்ற வழக்கு பின்னணி கொண்ட அமைச்சர்களும் தவெக ஆட்சியில் தமிழக அமைச்சரவையில் இருக்கும் போது பெண்களின் பாதுகாப்பினை இவர்களிடம் எதிர்பார்ப்பது வீண். மாற்றத்தை எதிர்நோக்கி வாக்களித்த தமிழக மக்களுக்கு புதிய ஆட்சியிலும் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு சம்பவங்கள் பேரிடியாகவே வந்து விழுவது தவெக அரசின் திறனற்ற நிர்வாகத்திற்குச் சான்று” என பதிவிட்டுள்ளார்.
