தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் மாநிலம் முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஒரு சந்திப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றபோது, அங்கு அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கட்சிகளுக்கு இடையிலான அரசியல் போட்டிகள் ஒருபுறம் இருந்தாலும், முதலமைச்சர் விஜய்க்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் திரண்டு வந்து பூங்கொத்து வழங்கி மிக உற்சாகமாக வரவேற்றனர். இந்தச் சந்திப்பே ஒரு அரசியல் திருப்பமாகக் கருதப்பட்ட நிலையில், அங்கு நடந்த எதிர்பாராத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ், முதலமைச்சர் விஜய்யை வரவேற்க முன்வந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சரின் கைகளைப் பிடித்து, ரஜினியின் பாட்ஷா படம் பாணியில் தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக முத்தமிட்டார். இது வைரலாகி வருகிறது.
