Author: Editor TN Talks
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இன்று காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க இந்த ஆஷஸ் தொடர் 74-வது முறையாக நடைபெறுகிறது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி கடந்த 2010-2011-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரை 3-1 என வென்றது. அதன் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 3 தொடர்களையும் இங்கிலாந்து அணி இழந்தது. இதில் 13 போட்டிகளில் தோல்வியையும், 2 ஆட்டத்தை டிராவும் செய்திருந்தது இங்கிலாந்து அணி. எனினும் இம்முறை வயதான வீரர்கள், பலவீனமான பந்து வீச்சுடன் காணப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கக்கூடும். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஜோப்ரா…
சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பிஹாரில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹார் முதல்வராக இன்று பதவியேற்றார். அவருடன் 26 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மவுன விரதம் இருந்தார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்டு 236 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மேலும், அக்கட்சி 3.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், “கடந்த மூன்று ஆண்டுகளாக நான் உழைத்ததை விட இரண்டு மடங்கு கடினமாக உழைப்பேன். என் முழு பலத்தையும் பயன்படுத்துவேன். பின்வாங்கும் கேள்விக்கே இடமில்லை. பிஹாரை மேம்படுத்துவதற்கான எனது உறுதியை நிறைவேற்றும் வரை பின்வாங்க மாட்டேன்.…
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (நவ. 21) முதல் வரும் 23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக இன்று (நவ. 21) காலை டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக தனது x தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு, மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சி மாநாடு என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜி 20 உச்சிமாநாட்டில் நடைபெறும் முக்கிய 3 அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்று…
தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையை உடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 272 முக்கிய பிரமுகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஓய்வுபெற்ற 16 நீதிபதிகள், 123 அரசு உயர் அதிகாரிகள், 133 ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 272 முக்கிய பிரமுகர்கள் ‘தேசிய அரசியல் சாசன அமைப்புகள் மீதான தாக்குதல்’ என்ற தலைப்பில் திறந்த மடல் எழுதி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: சில அரசியல் தலைவர்கள், நேர்மையான மாற்று கொள்கைகளை முன்வைப்பதற்கு பதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் நாடகம் நடத்துகிறார்கள். அவர்கள் இந்திய பாதுகாப்புப் படையினரின் வீரத்தையும் சாதனைகளையும் சந்தேகிக்கின்றனர். நீதித் துறையின் செயல் பாட்டையும் சந்தேகிக்கின்றனர். நாடாளுமன்றத்தையும் அதன் அதிகாரிகளையும் குறை கூறுகின்றனர். இப்போது அதேமுறையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் நேர்மை கண்ணியத்தின் மீது குறை கூறுகிறார்கள். குறிப்பாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் தேர்தல் ஆணையம்…
வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது. ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ வழி நடத்திய புஸ்ஸி ஆனந்தை மட்டுமே மலைபோல் நம்பி தவெக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் ஆனந்தை அமர்த்தினார். ஆனால், மன்றத்தை கட்டி இழுப்பது போல் கட்சியை அவரால் கட்டி இழுக்க முடியவில்லை. பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகளை ‘விற்பதாக’ ஆங்காங்கே புகார்கள் வெடித்தன. விஜய்க்கும் தங்களுக்கும் இடையில் தடுப்பு அரணாக இருப்பதாக ஆனந்த் மீது தொண்டர்கள் அதிருப்திகளைக் கொட்டினார்கள். இருந்த போதும் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டிலும் கண்ணசைவிலும் வைத்திருந்தார் ஆனந்த். இதனால் அவரை மீறி கட்சிக்குள் எதுவும் அசையாது என்ற நிலையே இருந்தது. இந்த நிலையில் தான், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் என அரசியலில் கரை கண்டவர்கள் மாற்றுக்…
சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை ஓய்வின்றி பணியாற்ற தயாராக இருக்க வேண்டுமென திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளுடனான சந்திப்பு அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 89 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, 42-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் திருவள்ளூர் தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய சிட்டிங் தொகுதியான திருவள்ளூரில் மீண்டும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். எஸ்ஐஆர் திருத்தப் பணிகள், பூத் கமிட்டி கூட்டங்களை சுணக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். தேர்தல் முடியும் வரை அனைவரும் ஒய்வின்றிஉழைக்க வேண்டும். பொது மக்களை சந்திக்கும்போது அரசின் நலத் திட்டங்களின் பயன்களை எடுத்துக்கூற வேண்டும் என்பன உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே,…
தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு அனுப்பப்பட்டதாகக் கூறி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: கோவை காந்திபுரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் காலை உணவு அனுப்பி வைத்த திமுக அரசின் ஆணவம் அருவருக்கத்தக்கது. மனிதாபிமானமற்ற இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கழிப்பறையில் கூட காசு பார்த்து கொள்ளையடிக்கும் திமுக தலைவர்களை ராஜமரியாதையுடன் நடத்தும் உங்கள் அரசுக்கு, நமது நாட்டைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாகரிகமான முறையில் உணவளிப்பதில் என்ன சிக்கல்? எங்களுக்கு உணவளியுங்கள் என்று தூய்மைப் பணியாளர்கள் கேட்டார்களா? எதற்காக ‘சோறு போடுகிறோம்’ என்ற போர்வையில் அவர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கிறீர்கள்? விளிம்பு நிலை மக்கள் மீது திமுகவுக்கு உள்ள வெறுப்பு இந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போகும் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. திமுக…
நமது இசையை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் காப்புரிமையை பெற வேண்டும். அதன் மூலம் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்று ஆளுநர் ரவி கூறினார். சென்னை பாரதிய வித்யா பவன் சார்பில் மார்கழி மகா உற்சவம் நடைபெறுகிறது. அதன் துவக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசுகையில், ” தமிழ்நாட்டில் பாரதிய வித்யா பவன் கலாச்சார மையமாக திகழ்கிறது. அதைப் போல, கலைக்களுக்கான மாதமாக மார்கழியை கடைப்பிடிக்கிறோம். உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கலைகளை காண்பதற்கும், கற்பதற்கும் சென்னைக்கு பலரும் வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் உள்ள தனித் திறமைகளை வளர்ப்பதில் மார்கழி மாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் தலையீட்டால் கலை மற்றும் கலாச்சாரம் மறைக்கப்பட்டன. அவற்றை நாம் மீட்டு காக்க வேண்டும். அனைத்து மொழிகளையும் இணைப்பதற்கு இசை முக்கியமாக உள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை தவிர்த்து,…
சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்யும் வகையில் எதிர்காலத்தில் மின்சார ஏர் டாக்சி சேவையை இயக்கலாம் என கும்டா பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA அல்லது கும்டா), சென்னையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு தேவையான பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது குறித்த தனது ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. அதில் 2023-ஆம் ஆண்டு முதல் 2048-ஆம் ஆண்டு வரையில், சென்னையில் பொது போக்குவரத்தான பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், விரைவு ரயில், புதிய வழித்தடங்கள், சாலை வசதி, சாலை அமைப்பு, பார்க்கிங் வசதிகள், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மின்சார பேருந்துகளுக்கும், மின்சார வாகனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல, மின்சார படகு சேவையான ‘வாட்டர் மெட்ரோ’ மற்றும் மின்சார விமான சேவையையும் அமல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், சென்னை ஐஐடி-யில் இ-பிளேன் (ஏர் டாக்சி) தயாரிப்புப்…
குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் மின்பேட்டரி காணாமல் போனது. இந்த சம்பவம் குறித்து செயல் அலுவலர் உச்சிமகாளி அளித்த புகாரின் அடிப்படையில், 6 பேர் மீது திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். ஒரு வழியாக, 2011 ஆம் ஆண்டு வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுந்தரேசன், குற்றவாளிகள் 6 பேரையும் கைது செய்து வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை கேட்பதற்காக சுந்தரேசனை நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், தற்போது மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியாக உள்ள சுந்தரேசன்…