Author: Editor web1

கோவாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் வளர்ச்சிக்கும், சிறந்த நிர்வாகத்துக்கும் மக்கள் துணை நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அண்மையில் கோவா ஜில்லா பரிஷத்துகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வடக்கு கோவாவில் பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், தெற்கு கோவாவில் பாஜக 10 மற்றும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் மாநில கட்சியினரும், சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள அறிக்கையில், சிறந்த நிர்வாகத்துக்கு கோவா மக்கள் துணையாக நிற்பதாகவும், வளர்ச்சி அரசியலுக்கு அவர்கள் துணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்த கோவா சகோதர் சகோதரிகளுக்கு தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் கனவுகளையும் லட்சியங்களையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் மோடி…

Read More

மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய குழு அமைத்த சென்னை உயர் நீதிமன்றம், ஜனவரி 23ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கோவை மருதமலை வனப்பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில், 184 அடி உயரத்துக்கு முருகன் சிலையை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்திருந்தது. இதனால்  யானை வழித்தடங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், மருதமலையில் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் 13 ஏக்கர் நிலப்பரப்பில்  அமைந்துள்ள உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், அடிவாரத்தில் உள்ள 4.96 ஏக்கர்…

Read More

அரசுப் போக்குவரத்து கழகங்களில் தவிர்க்கப்பட்ட ‘தமிழ்நாடு’ பெயர் காக்க நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், ‘தமிழ்நாடு’ பெயர் அழிக்கப்பட்டு வெறுமனே அரசு போக்குவரத்துக் கழகம் என்று மட்டும் எழுதப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப காலங்களில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என்றே அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த நிலையில் தற்போது திமுக அரசு தமிழ்நாடு பெயரை தவிர்க்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும், நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுத்த பிறகும் திமுக அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்று பெயரைச் சேர்க்க மறுத்து அமைதி காப்பது ஏன்? என்று சீமான் தெரிவித்தள்ளார்.  இந்த பெயர் நீக்கத்திற்கு போக்குவரத்துத்…

Read More

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கலான ஆட்கொணர்வு வழக்கு ஒன்றில் அரசு வழக்கறிஞருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என, திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் 2014ம் ஆண்டு காவல் ஆய்வாளராக பணியாற்றிய சந்திரசேகரன் என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகள் ஊதிய உயர்வு நிறுத்தம் செய்து, திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்த மேல் முறையீட்டில் இறுதியாக, ஊதிய உயர்வு நிறுத்தம் செய்த தண்டனை, 6 மாதங்களாகக் குறைத்து, டிஜிபி உத்தரவிட்டார். ஆய்வாளர் முறையாக தகவல்களை தெரிவித்ததாக அரசு வழக்கறிஞர் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்காமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகரன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த…

Read More

வங்கதேச நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை ராணுவம் மற்றும் போலீசார் தடுத்துள்ளநிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி மர்ம நபர்களால் சுடப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹாதி, டிசம்பர் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில்  பயங்கர கலவரம் வெடித்தது. இந்தநிலையில், பத்திரிகை அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டதுடன், முன்னாள் அமைச்சர் மொஹிபுல் ஹசன் சவுதுரி நவுபலின் வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள், தீ வைத்தனர். இதனிடையே இந்து இளைஞர் ஒருவரை ஒரு கும்பல் அடித்து கொன்று, அவரின் உடலை சாலையில் போட்டு தீ வைத்து எரித்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நாடாளுமன்ற வளாகம் உள்பட முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டனர். இருப்பினும்,…

Read More

மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், தனக்கு மிகவும் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சொந்த மண்ணில் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்த உள்ளது பெரிய சவாலாக இருக்குப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப சிறிது அவகாசம் தேவைப்படுவதாகவும், மோசமான ஃபார்மில் இருந்து நிச்சயம் மீண்டு வருவன் என்றும் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தெரிவித்தார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆண்டு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ரன்கள் எடுக்க திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 21 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 218 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 13.62ஆக உள்ளது. இந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் ஒரு அரைசதம்…

Read More

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவுத் திட்டமான ககன்யான் திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு ககன்யான் விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதன் வேகத்தை பாதுகாப்பாகக் குறைக்க உதவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விண்கலத்தின் ட்ரோக் பாராசூட்களின் தகுதி மற்றும் நம்பகத்தன்மையை மதிப்பிடும் வகையில் தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. சண்டிகரில் உள்ள டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ககன்யான் விண்வெளி திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் மனித விண்வெளிப் பயணத்திற்கு பாராசூட் அமைப்பைத்…

Read More

பீகார் தேர்தல் முடிவுகள் மூலம் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சென்றுள்ள பிரதமர் மோடி, நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தரையிறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு காரணத்தையடுத்து, பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தகாவுக்கு திரும்பியது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டு திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். இந்தநிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால், மாநாட்டு திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விழாவில் பங்கேற்க வந்த பாஜ தொண்டர்களில் சிலர் ரயில் விபத்தில் உயிரிழந்ததை அறிந்து வருந்துவதாக குறிப்பிட்டார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பிரதமர்…

Read More

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனை பாஜக அரசு நசுக்கி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் 2005-ஐ ரத்து செய்து, அதற்குப் பதிலாக வி.பி ஜி ராம் ஜி (விக்சித் பாரத் – ரோஜ்கர் அவுர் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் குறித்து கருத்த தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பல ஆண்டுகளாகவும், கொரோனா காலத்திலும் ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த திட்டத்தின் கட்டமைப்பை விவாதமோ, ஆலோசனையோ இல்லாமல் தன்னிசையாக பாஜக அரசு மாற்றி…

Read More

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட ‘மா வந்தே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. ‘மா வந்தே’ என்ற தலைப்பில் உருவாகி வரும் திரைப்படத்தை வீர் ரெட்டி தயாரிக்கிறார். கிராந்தி குமார் இயக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இந்தநிலையில், ‘மா வந்தே’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை ‘மா வந்தே’ திரைப்படத்தில் மிகவும் சிறப்பான வகையில் காட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படம், இந்திய அளவில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More