Author: Editor web3
இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் சொத்து கணக்கை டிக்ளேர் செய்ய தயாரா என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார் வேலூா் மாவட்டம், அகரம்சேரியில் விஜய் – யின் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் உரையாற்றி வரும் விஜய், “எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான். எங்கள் வார்த்தையில் இருந்து மாறமாட்டோம். மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லாததால் இத்தனை ஆண்டுகளாக வேறு வலியில்லாமல் ஸ்டாலின் சார் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு சரியான நேரத்தில் ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் நம்முடைய தவெக. வரும் தேர்தல் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல். தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கு தான் தேர்தல் என்றும் தமிழ்நாட்டுக்கும், என்டிஏ-க்கும்தான் தேர்தல் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இதென்ன நாடாளுமன்றத் தேர்தலா? பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?…
வேலூர் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜர் உரையாற்றி வருகிறார். அப்போது, தன் நெஞ்சத்தில் உள்ள சொந்தங்களான தமிழ் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார். ஆனால் ஆளும் கட்சியின் சதியால் அதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்த விஜய், மக்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பதாக கூறினார். அதாவது, தவெக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் வந்து தனது சொந்தங்களை சந்திக்கவுள்ளதாக கூறினார். தொடர்ந்து காளையை வைத்து ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், ஒரு ஊரில் பெரும் அனுபவசாலிகளால் கூட அடக்கமுடியாத காளை ஒன்று இருந்தது. அந்த காளையை அடக்க ஒரு சின்ன பையன் கெத்தா வந்து நின்றதாக கூறினார். பிறகு அந்த காளைக்கு 2 புல்லுக்கட்டை கொடுத்து அச்சிறுவன் அதை அடக்கிவிட்டதாகவும் பேசினார். அக்கதையில் வரும் காளை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் இன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது வரலாறு காணாத வகையில் மக்கள் கூட்டம் திரண்டது. வேலூரின் முக்கிய வீதிகள் வழியாக அவர் வாகனத்தில் சென்றபோது, சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் அவரைக்காண முண்டியடித்தனர். இதனால் வேலூர் மாநகரமே மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போன்ற காட்சி உருவானதுடன், நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 4998 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முறையான அனுமதி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள்ளும் இந்த வெளிநபர்கள் புகுந்ததால், கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்தது. இந்தத் தேர்தல் வாகனப் பேரணியின் போது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலால், பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். கூட்ட நெரிசலில் சிக்கி ஒருசிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் கொண்ட அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. . இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இந்திய வீரர்கள் மொத்தமாக 11 முறை டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய மேடையில் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணி, இவ்வாறு அடுத்தடுத்து விக்கெட்டுகளை ரன் ஏதுமின்றி இழப்பது கிரிக்கெட் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராகப் பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா, இந்தத் தொடரில் மோசமான ஃபார்மில் உள்ளார். தான் விளையாடிய முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து (0, 0, 0) மோசமான சாதனையைப் படைத்துள்ளார். அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து…
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக, இந்த முறை தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளைக் கோரியுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்பும் 12 விருப்பத் தொகுதிகளின் பட்டியல் திமுக தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடையநல்லூர், சங்கரன்கோவில், சாத்தூர், அரியலூர், சீர்காழி, திருச்சி கிழக்கு (அல்லது) மணப்பாறை, புவனகிரி, கடலூர், நெய்வேலி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, கோவை வடக்கு ஆகிய 12 தொகுதிகளில், தங்களுக்கு வலுவான வாக்கு வங்கி இருப்பதாகக் கருதும் 8 தொகுதிகளைக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும் என மதிமுக வலியுறுத்தியுள்ளது. மேலும்,இந்த முறை தொகுதிப் பங்கீட்டில் மதிமுக இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த காலங்களைப் போல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல், இந்த முறை தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனிச் சின்னத்திலேயே போட்டியிடுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். அதாவது, கடந்த காலங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது கட்சியின் தனித்துவத்தைப் பாதிப்பதாக நிர்வாகிகள் கருதுவதால்,…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு ( SIR) இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்ரவரி 23) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மாவட்ட வாரியான புள்ளிவிவரங்களை வெளியிட்டார். அதேபோல், அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் முன்னிலையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் பட்டியல் வழங்கப்பட்டது. மொத்த வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 5.44 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கம்: போலி வாக்காளர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகளைத் தவிர்க்கும் நோக்கில், சுமார் 97.37 லட்சம் பெயர்கள் வரைவுப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. புதிய வாக்காளர்கள்: 18 வயது பூர்த்தியடைந்த சுமார் 66 லட்சம் புதிய வாக்காளர்கள் இந்தத் திருத்தப் பணியின் போது தங்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பித்திருந்தனர். பெண் வாக்காளர்கள்: சுமார் 2.77 கோடி. ஆண் வாக்காளர்கள்: சுமார் 2.66 கோடி. மூன்றாம் பாலினத்தவர்:…
திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக தொடங்கியுள்ளது. இதனிடையே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லா, “திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மமவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, இந்த முறை தங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்…
திமுக கூட்டணி சுயநலம் நிறைந்தது; அதனால்தான் காங்கிரஸ் முன்கூட்டியே ஆட்சியில் பங்கு கேட்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்துள்ள சூழலில், அதிகாரப் பகிர்வு மற்றும் துணை முதல்வர் பதவி குறித்த அவரது மறைமுக விருப்பம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கைகள் கூட்டணி கட்சிகளிடையே எழுந்து வரும் நிலையில், பிரேமலதாவின் இந்த நகர்வை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பொன்னேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வருவதற்கு இன்னும் 2 மாத காலம் தான் உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களாகிய நீங்கள் வாக்களித்து அமோக வெற்றியைத் தேடி தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நம்முடைய கூட்டணி…
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும் விற்பனையாகிறது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சியான திமுகவில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, துணை முதலமைச்சரும் கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், எதிர்வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் மற்றும் இளைஞரணியைச் சேர்ந்த சுமார் 40 பேருக்கு கட்டாயமாக எம்.எல்.ஏ சீட் வழங்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், அடுத்தக்கட்ட தலைமுறையை அரசியலில் முன்னிலைப்படுத்தவும் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில் பட்டியலில் இடம்பெற்றோர் குறித்த விபரங்களையும், அவர்களுக்கு சீட் வழங்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்பது குறித்தும் திமுக தலைமை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாம். ஆனால், உதயநிதியின் இந்த அதிரடி நகர்வு கட்சியின் சீனியர் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் 40 சீட்டுகள் இளைஞரணிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த மூத்த…