Author: Editor web3

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன் இந்தப் பிரச்சினையை எழுப்பப் போவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டதாக மொஹ்சின் நக்வி கூறினார். பாகிஸ்தான் இந்த சம்பவத்தை ஐ.சி.சி.யிடம் அதிகாரப்பூர்வமாகப் புகாரளிக்கும். அரசியலும் விளையாட்டும் எப்போதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும் என்று கூறினார், 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வழிகாட்டியாக இருந்த சர்பராஸ் அகமது கூறுகையில், “போட்டியின் போது இந்தியாவின் நடத்தை சரியில்லை, அது கிரிக்கெட்டின் உணர்வுக்கு எதிரானது. இருப்பினும், நாங்கள் எங்கள் வெற்றியை விளையாட்டு உணர்வுடன் கொண்டாடினோம். கிரிக்கெட் எப்போதும் விளையாட்டு உணர்வுடன் விளையாடப்பட வேண்டும்,” என்றார். இந்திய…

Read More

சென்னையில் இன்று (டிச.,23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பல நாடுகளும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டில் தங்கம் விலை, தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், கடந்த (டிச.,15) ஆபரண தங்கம் கிராம், 12,515 ரூபாய்க்கும்; சவரன், ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனையானது. அந்தவகையில் நேற்று (டிச.,22) திடீரென தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் உயர்ந்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  இந்நிலையில் இன்று (டிச.,23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை…

Read More

கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், 2026 ஆம் ஆண்டு   75 மாநிலங்களவை இடங்களுக்கும் தேர்தல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெரிய அளவிலான தேர்தல்கள் நடைபெற உள்ளன. கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் போன்ற முக்கிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அதே நேரத்தில், 75 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல்களும் திட்டமிடப்பட்டுள்ளன. மேல்சபையில் உள்ள சில இடங்கள் 2026 ஏப்ரல், ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காலியாகும் நிலையில், இது என்டிஏ (NDA) மற்றும் இந்தியா கூட்டணி (India Bloc) இடையிலான அரசியல் அதிகார சமநிலையை மாற்றக்கூடியதாக இருக்கலாம். வரவிருக்கும் தேர்தல்களில் பீகாரில் இருந்து 5 ராஜ்ய சபா இடங்களும், உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10 இடங்களும் காலியாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு மற்றும்…

Read More

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சியின் அமைப்பு ரீதியான தயார்நிலை மற்றும் தேர்தல் உத்தி, கூட்டணி பங்கீடு தொடர்பாக குறித்து விவாதிக்க தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல் இன்று தமிழகம் வரவுள்ளார். சமீபத்தில் தமிழகத்திற்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், செவ்வாய்க்கிழமையான இன்று சென்னைக்கு வருகை தரவுள்ளார். இந்த பயணத்தின்போது, ​​அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை முறைப்படி தொடங்க உள்ளார். இது, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக பாஜகவின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பாஜக வட்டாரங்களின்படி, இந்த பயணத்தின்போது, கோயல், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தவுள்ளார். இந்தக் கலந்தாலோசனைகளின்போது, ​​கட்சியின் அமைப்பு ரீதியான தயார்நிலை மற்றும் தேர்தல் வியூகம் குறித்து கேட்டறிவார்.…

Read More

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் விசா விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் ‘ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை’ அறிமுகப்படுத்தியுள்ளது. சீன ஆன்லைன் விசா விண்ணப்ப முறையானது இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தில் டிசம்பர் 22, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும். விண்ணப்பதாரர்கள் https://visaforchina.cn/DEL3_EN/qianzhengyewu என்ற இணையதள முகவரியில் படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றலாம் என்று கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைன் விசா விண்ணப்பங்களை எளிதாக்குவதற்காக டெல்லியில் உள்ள சீன தூதரகம் ‘ஆன்லைன் விசா விண்ணப்ப முறையை’ நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. Shenzhen நகரைத் தலைமையிடமாகக் கொண்ட சீன ஆன்லைன் தளம் Greater Bay Area (GBA) தெரிவித்ததாவது, இதற்கு முந்தைய முறையில் விண்ணப்பதாரர்கள் பல காகித ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. புதிய ஆன்லைன் நடைமுறை அதைவிட எளிமையானதாக உள்ளது. சீனத் தொழில் வல்லுநர்களுக்கான வணிக விசா: Greater Bay Area…

Read More

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் சம்பவம் குறைந்துள்ளது. மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. மேலும், மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அதை நாட்டுடைமையாக்கும் வேலைகளையும் இலங்கை அரசு செய்து வருகிறது. மேலும், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அனைவரையும் கைது செய்துள்ளனர். இன்னொரு பக்கம் தடை செய்யப்பட்ட கச்சத்தீவு அருகே மீன் பிடித்ததால் 49 மீனவர்கள் நம் நாட்டின் கடலோர காவல்படையால் கைது…

Read More

தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து வேலைவாய்ப்பு, மகளிர் உரிமை, விவசாயங்களை பாதுகாப்பது,மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கி திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறோம் யாரையெல்லாம் சந்திக்க உள்ளோம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.திமுக தேர்தல் அறிக்கை  முதலமைச்சர் உடைய ஆலோசனைகளை பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கொண்டு உருவாக்கப்படும். வேலை வாய்ப்புகள் ,மகளிர் உரிமை,விவசாயிகளை பாதுகாப்பது,மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்பை பறிப்பதை ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில் வேலை…

Read More

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் வார தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் உச்சத்தை எட்டி, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். (டிச.22) இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்து ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More

கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் டிர்ம்பும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார். இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில், ரஷ்ய அதிபர் புதின் இராணுவத்தின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடந்த சந்தேகத்திற்குரிய கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார் . 56 வயதான சர்வரோவ், ஆயுதப்படைகளின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக இருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், உக்ரைனிய உளவுத்துறை அமைப்புகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் உக்ரைன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ஊடகங்களின்படி, “ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் ஃபனில் சர்வரோவ், யசெனேவயா தெருவில் வெடிகுண்டு வீசப்பட்டு…

Read More

கில் ஒருநாள் கேப்டன் பதவியை இழக்கக்கூடும் என்றும், ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷுப்மன் கில்லுக்கு சிக்கல்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த ஆண்டில் அவர் முதலில் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், பின்னர் ஒருநாள் (ODI) அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கூடுதலாக, டி20 அணியின் துணை கேப்டன் பொறுப்பையும் அவர் வகித்தார். ஆனால், டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பட்டியலில், ஷுப்மன் கில்லின் பெயர் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்படலாம் என்றும், அதற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டிலும் அணிகளை வழிநடத்திய அனுபவம் ஷ்ரேயாஸுக்கு உள்ளது. இதனால், அவரை தலைமைப் பொறுப்புக்கு…

Read More