Author: Editor web3

பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ‘தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது’ எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில்…

Read More

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸின் சில தலைவர்கள் ‘ஆட்சியில் பங்கு வேண்டும்’ என சூளுரைத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாணிக்கம் தாகூர், பிரவீண் சக்கரவர்த்தி ஆகியோர் நேரடியாகவே திமுவிடம் தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வருகிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலினோ, “ஆட்சியில் பங்கு என்ற வாதம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இருப்பினும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 150-160 தொகுதிகள் வரை வெற்றி பெறும். உதய சூரியன் சின்னம் என்றால் ஒரு மாதிரி…. மற்ற சின்னம் என்றால் ஒரு மாதிரி….” என்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்துக்கு கடும் அதிருப்தியில் இருக்கும் மாணிக்கம் தாகூர் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று கூறிவருகிறார். இந்தநிலையில், இன்று மதுரை திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமைச்சரவையில்…

Read More

இந்தியாவை “மிகவும் வெற்றிகரமான” வளர்ந்து வரும் பொருளாதாரம் என்றும், உலக விவகாரங்களில் அதன் செல்வாக்கு விரிவடைந்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் நடைபெற உள்ள India–AI Impact மாநாடு குறித்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த முக்கியமான உலகளாவிய விவாதத்தை நடத்த இந்தியா சரியான நாடாகும் என்று குறிப்பிட்டார். ஐ.நா. தலைமையகத்தில் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துடனான ஒரு உரையாடலில், இந்த மாநாடு நடத்த ஏற்பாடு செய்ததற்காக இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதகுலம் முழுவதற்கும் பயன்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். AI, வல்லரசு நாடுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படக் கூடாது: செயற்கை நுண்ணறிவு (AI) மிக முன்னேறிய நாடுகளின் கட்டுப்பாட்டில் மட்டும் இருக்கும் கருவியாக மாறக் கூடாது என்பதாகும். உலகின் இரண்டு பெரிய வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் உருவாகக் கூடாது என்று…

Read More

சட்டசபை தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தங்கள் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தே.மு.தி.க. மற்றும் ராமதாஸ் தரப்பு ஆகியவை இன்னும் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் மவுனம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் சசிகலாவும் புதிய கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் குதிக்க முடிவு செய்துள்ளார். சசிகலா சமீபத்தில் தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கடந்த 3-ந்தேதி அண்ணா நினைவு நாளில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘எதிரிகள் யார்? துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இதுபற்றி நான் தெளிவாக சொல்ல வேண்டியதில்லை. வருகிற…

Read More

கனடாவில் ஏப்ரல் 30 வரை விஜய்யின் ஜனநாயகன் வெளியாக வாய்ப்பில்லை என்று படத்தை வெளியிடும் York Cinemas நிறுவனம் அறிவித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜன நாயகன்’ பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை. தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கை வாபஸ் பெற்ற பட தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளது. https://x.com/Chrissuccess/status/2022737262157664657? இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது. முன்பதிவு செய்த அனைவரும்…

Read More

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மக்களின் உயரத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. உலகிலேயே மிகக் குட்டையான மக்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பதை தெரிந்துகொள்வோம். அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடான திமோர் லெஸ்டேவின் சராசரி உயரம் உலகிலேயே மிகக் குட்டையானதாகக் கருதப்படுகிறது. அந்நாட்டில் ஆண்களின் சராசரி உயரம் சுமார் 160 செ.மீ. மற்றும் பெண்களின் சராசரி உயரம் சுமார் 152 செ.மீ. ஆகும். உயரம் என்பது மரபியல், ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைமுறை போன்ற பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக சிறுவயதில் போதிய சத்துணவு இல்லாமை மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை வளர்ச்சியை பாதிக்கக்கூடும். பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை சந்தித்துள்ள திமோர் லெஸ்டே நாட்டில் இந்த காரணிகள் மக்களின் சராசரி உயரத்தில் தாக்கம் ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒரு நாட்டின் சராசரி உயரம் அந்நாட்டின் அனைத்து மக்களையும் பிரதிபலிக்காது; ஒரே நாட்டுக்குள்…

Read More

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9 முதல் அமெரிக்காவில் காணாமல் போன 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வசிக்கும் சாகேத் ஸ்ரீனிவாசய்யா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து வந்தார். கலிபோர்னியாவில் உள்ள டில்டன் பிராந்திய பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு ஏரிக்கு அருகில் அவர் கடைசியாகக் காணப்பட்டார். https://x.com/CGISFO/status/2022473936676753764? சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளது. தூதரகம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும், உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும்…

Read More

அமைச்சர் ராஜ கண்ணப்பனை ராஜினாமா செய்யக்கோரி தலைமை கூறுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஆட்சியில் பங்கு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுக-காங்கிரஸ் கூட்டணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள் இசைவு கொடுக்காமல் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 170 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு 160 தொகுதிகள் வரை வெற்றிப்பெறும் என்று பேசியிருந்தார்.  அதில், 2021ல் 173 தொகுதியில் போட்டியிட்ட திமுக 133 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது என்றும், காங்கிரஸ் கேட்பது திமுக தோல்வியடைந்த இடங்களைத்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருந்தார். பொதுவெளியில் அமைச்சர் கூறிய கருத்துக்களால் இந்த கூட்டணியில்…

Read More

வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்கவுள்ள நிலையில், இவ்விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும். இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி…

Read More

நேற்றைய ரூ.5000 அறிவிப்பில் இருந்து மக்களின் ஆதரவு திமுகவிற்கு அதிகம் இருப்பதை உணர்ந்து ஆட்சியில் பங்கு என்பதை காங்கிரஸ் கட்சியினர் யாரும் பேச மாட்டார்கள் எனவும் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என்றும் ஆர்.எ.ஸ் பாரதி திட்டவட்டமாக கூறியுள்ளார். திமுக சட்டத்துறை மாநில நிர்வாகிகள் , மண்டல பொறுப்பாளர்கள் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திமுக சட்டத்துறை தலைவர் விடுதலை மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, திமுக சட்டத்துறை செயலாளர் என் ஆர் இளங்கோ ஆகியோர் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சட்டத்துறை நிர்வாகிகள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு திமுக சட்டத்துறை நிர்வாகிகள் சட்ட ரீதியாக எவ்வாறு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக…

Read More