Author: Editor web3

நாம் அன்றாடப் பொருட்களை யோசிக்காமல் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றை சரியான நேரத்தில் மாற்றுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். சில பொருட்கள் காலப்போக்கில் பாக்டீரியாக்களைக் குவிக்கின்றன, மற்றவை அவற்றின் செயல்திறனை இழக்கின்றன. இந்த பொருட்களை சரியான நேரத்தில் மாற்றுவது தூய்மையைப் பராமரிப்பதற்கும் நோயைத் தடுப்பதற்கும் மிக முக்கியம். எனவே, சரியான நேரத்தில் மாற்றப்படாவிட்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆறு அன்றாட வீட்டுப் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்படும் பிளாஸ்டிக் ஐஸ் கியூப் தட்டுகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். உறைவிப்பான் பெட்டியில் வைத்திருந்தாலும், அவை காலப்போக்கில் நாற்றங்களையும் பாக்டீரியாக்களையும் குவிக்கக்கூடும். அவற்றில் சிறிய விரிசல்கள் உருவாகின்றன, அவை கிருமிகளைக் கொண்டிருக்கலாம். ஐஸ்கட்டி விசித்திரமாக சுவைத்தால் அல்லது தட்டு நிறம் மாறினால், அதை மாற்ற வேண்டிய நேரம் இது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். தினமும் கழுவிய…

Read More

2026 T20 உலக கோப்பை  கிரிக்கெட் தொடருக்காக, ஆஸ்திரேலியா முக்கிய அணியை இன்று அறிவித்துள்ளது. முந்தைய அணியில் இடம்பெற்ற கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த முறை அணியில் இல்லை; அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையொட்டி, ஆஸ்திரேலியா தனது அணியில் இரண்டு மாற்றங்களையும் செய்துள்ளது. இன்று (ஜனவரி 31) அணியை மாற்றுவதற்கான இறுதி நாளாகும். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரில், தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 20 அணிகள் விளையாட உள்ளன. ஆஸ்திரேலியா பி பிரிவில் இடம்பெற்றுள்ளது, இந்த பிரிவில் உள்ள அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தக் காயத்திலிருந்து மீண்டு டி20 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

Read More

சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், “ஓட்டுக்கு யார் அதிகமாகப் பணம் கொடுப்பது என்பதில் மட்டும்தான் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையேயான போட்டி நிலவுகிறது. ஆனால் நாங்கள், உலகளாவிய அரசியலை முன்வைக்கிறோம். புவி வெப்பமடைதல் போன்ற உலகப் பிரச்னைகளைப் பற்றி நாம் பேசி வருகிறோம். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் போல, ஒரு நாள் உலகமே நீரின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று நாம் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறோம். ஐநா சபை மற்றும் ஆய்வாளர்கள் பூமியின் வாழ்நாள் குறித்து எச்சரித்தும், எந்தத் தலைவரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஒரு நாட்டின் எதிர்காலமே வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆசிரியர்களை வீதியில் நிறுத்திவிட்டு, இது ஒரு நல்லாட்சி என்று எப்படிச் சொல்ல முடியும்? 6,800 கோடி ரூபாய் ஒரு பொங்கலுக்குச் செலவு செய்கிறார்கள். 12,000 கோடி ரூபாய் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் மற்றும் குடும்பத் தலைவிகளுக்கு வழங்குகிறார்கள். ஒரு குடும்பத் தலைவியை, ஒரு நாளைக்கு 30…

Read More

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியாவுடன் இணைந்து இலங்கை இந்தத் தொடரை நடத்துகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன, அவை தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குழு நிலைப் போட்டிகளில் ஒவ்வொரு நாளும் மூன்று போட்டிகள் நடைபெறும். இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன, மேலும் பிப்ரவரி 15 ஆம் தேதி ஒருவருக்கொருவர் மோதுகின்றன. இந்தநிலையில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடியுள்ள போட்டித் தொடரின் கீதத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி வெள்ளிக்கிழமை அன்று, 2026 ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலான “ஃபீல் தி த்ரில்” என்பதை வெளியிட்டது. இந்திய இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடியுள்ள இந்தப் பாடல், உற்சாகத்தையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வரிகளுடன், சக்திவாய்ந்த மற்றும் அழகாக இசையமைக்கப்பட்ட பாடலாக உள்ளது. https://x.com/ICC/status/2017261077483180275? 2026 டி20 உலகக் கோப்பைக்கான கீதம்…

Read More

தமிழ்நாடு வளர்ந்துள்ளது எனக்கூறும் மத்திய அரசின் தரவுகளை பிரதமரும், ஆளுநரும் படிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் கல்லூரி கட்டிடத்தையும் திருச்சி பைபாஸ் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அவர் சட்டக்கல்லூரி அருகே ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பார்க் கட்டிடத்தையும் திறந்து வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள 28 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சுமார் ரூ. 2 ஆயிரத்து 559 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற 49 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், அவர் ரூ.205 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத்தொடர்ந்து…

Read More

ரஷ்யப் பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட பிறகு பில் கேட்ஸுக்கு பாலியல் நோய் தொற்றியது என்று எப்ஸ்டீன் கோப்புகள் கூறுகின்றன. துணை அட்டர்னி என்று சமீபத்தில் வெளியான எப்ஸ்டீனின் ஆவணங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நீதித்துறை (US Justice Department) வெள்ளிக்கிழமை, நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான தனது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான ஆவணங்களை வெளியிட்டது. இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து முன்பு எழுந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அவற்றில், அவரைச் சுற்றி கூறப்பட்டதாக சொல்லப்படும் ஒரு பாலியல் தொற்று நோய் (sexually transmitted disease) குறித்த குற்றச்சாட்டுகளும் அடங்கும். துணை அட்டார்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச் கூறியதாவது, நீதித்துறை மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பக்க ஆவணங்களையும், 2,000-க்கும் மேற்பட்ட காணொளிகளையும் மற்றும் 180,000 படங்களையும் வெளியிடுவதாகக் கூறினார். . நீதித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கோப்புகளில், டிசம்பரில் நடந்த முதல் வெளியீட்டில்…

Read More

பா.ம.க.வுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்து, அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதை எதிர்த்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில், பிப்ரவரி 2 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாசுக்கும் இடையில் மோதல் நடந்து வரும் சூழலில், கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளதாக, தேர்தல் ஆணையம், அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தை ரத்து செய்து, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரியும், கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கடந்த 2025 மே மாதமே பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளதாக அன்புமணி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கட்சி நிறுவனர் என்ற முறையில் தனது அங்கீகாரம் இல்லாமல், சட்டவிரோதமாக கட்சி கூட்டங்களை நடத்தி அன்புமணி…

Read More

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை வழங்காமல் திமுக அரசு அநீதி இழைத்திருக்கிறது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். https://x.com/annamalai_k/status/2017470015797399794? தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், “சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்றக்கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே. தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் ஸ்டாலின், அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு. தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த…

Read More

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் டிசம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுப்புக்கு பின்னர் ஜன.5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் போராட்டம் தொடர்கிறது. தேர்வு நேரம் நெருங்குவதால் மாணவர்களின் நலன்கருதி ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு பள்ளிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து, அவர்கள் தங்களது வழக்கமான கற்றல், கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். பள்ளி நேரம் முடிந்ததும் அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்யலாம். ஆசிரியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் பள்ளி கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இருப்பினும் 36வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் தலையில் அரசு பேரிடியை இறக்கியுள்ளது. அவர்களுக்கு No work No pay அடிப்படையில் ஜனவரி மாத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போராட்டத்தை கைவிடவில்லை எனில் சம்பளம் பிடித்தம்…

Read More

தவெக தலைவர் விஜய், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழுவை அமைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ‘சட்டமன்ற தேர்தல் பிரசார மாநில சட்டப் பாதுகாப்பு குழு’ பின்வரும் வகையில் நியமிக்கப்படுகிறது. 1. CTR. ( B.C., LLB.. MA Criminology and Police Admins.. பொதுச் செயலாளர் 2. . P. வெங்கட்ரமணன் M.Com., MBA(Finance), ML.. பொருளாளர் 3. S.அறிவழகன் BA., BL., மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரிவு 4. S.குமரேசன் BA., BL., ML., மாநில ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு 5. K.சிவசண்முகம் BSc. BL., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு 6. P.பாண்டி (எ) K.P பாண்டியன் BA. BL., மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட ஆலோசனை பிரிவு 7. R.S.இந்திரா தன்ராஜ் B A., M.L., மாநில…

Read More