Author: Editor web3
நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லை என்றால், இதுவே உங்களுக்கான கடைசி வாய்ப்பு. அனைத்து பான் கார்டுதாரர்களும் தங்கள் பான் கார்டை உடனடியாக ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை வலியுறுத்தியுள்ளது. நீங்கள் அவ்வாறு செய்ய டிசம்பர் 31, 2025 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. இந்த தேதிக்குள் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால், அது ஜனவரி 1, 2026 முதல் செயலற்றதாகிவிடும். இந்த செயல்முறையை இன்னும் முடிக்காத வரி செலுத்துவோர் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைப்பதற்கு ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், அக்டோபர் 1, 2024 க்குப் பிறகு தங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பான் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ₹1,000 தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இந்த நபர்கள் டிசம்பர் 31, 2025 வரை தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இலவசமாக இணைக்கலாம்.…
உக்ரைனின் தலைநகரான கீவில் இன்று சனிக்கிழமை (டிசம்பர் 27, 2025) அதிகாலையில் தொடர்ச்சியான பலத்த வெடிச்சத்தங்களால் அதிர்ந்தது. தூக்கத்தில் இருந்த நகரம் திடீரென சைரன்கள் மற்றும் வெடிச்சத்தங்களால் விழித்துக் கொண்டது. உக்ரைன் அதிகாரிகள் உடனடியாக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டனர், தலைநகரம் ஏவுகணைத் தாக்குதலின் கடுமையான அச்சுறுத்தலில் இருப்பதாகவும், பாதுகாப்பு நிறுவனங்கள் முழு விழிப்புடன் இருப்பதாகவும் கூறினர். கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ டெலிகிராம் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நகரில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து குடிமக்களும் பாதுகாப்பான இடங்களிலும் நிலத்தடி தங்குமிடங்களிலும் இருக்குமாறு மேயர் வலியுறுத்தினார். நகரம் முழுவதும் அவசரகால சைரன்கள் ஒலித்தன, உக்ரைன் விமானப்படை தலைநகர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் வான்வழி எச்சரிக்கையை அறிவித்தது. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி, பல பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. கீவ் மீது வானத்தில் ஒரு பிரகாசமான மின்னல்…
சென்னையில் ஆபரணத் தங்கம் (22 கேரட்) விலை ஒரு கிராம் ரூ.110 உயர்ந்து ரூ.13,000ஐ தொட்டது, சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.12,890-க்கும், 1 சவரன் தங்கம் ரூ.1,03,120க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 1 கிராம் தங்கம் விலை ரூ.110 உயர்ந்து, ரூ.13,000க்கு விற்கப்படுகிறது. அதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.880 அதிகரித்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் வெள்ளி நேற்று ரூ.254-க்கு விற்கப்பட்டது. 1 கிலோ வெள்ளி ரூ.2.54 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 1 கிராம் வெள்ளி இன்று ரூ.20 அதிகரித்து ரூ.274-க்கும், 1 கிலோ விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.2.74 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திமுக அரசு நிகழ்த்திய சாதனைகளில் 5% ஆவது அதிமுக ஆட்சியில் நடந்தது என சொல்லமுடியுமா என்று ஓபன் சேலஞ்சாக கேட்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சிலரை போல் வாயில் வடை சுடும் அரசு அல்ல, ஆட்டோமொபைல் உற்பத்தி, போக்குவரத்து, வேலைவாய்ப்பு விளையாட்டு என அனைத்து துறைகளிலும் திமுக முதலிடத்தில் உள்ளது. இனி எப்போதும் ஏறுமுகம்தான் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நேரடியாக பயன்படக்கூடிய திட்டங்களை கொடுத்து, மக்களை நேரடியாக சந்திக்கும் அரசு இது. தீயணைப்பு, மீட்பு நிலையம், உயர்மட்டப் பாலம், சாலைகள் போன்ற பல திட்டங்களை தொடங்கி வைத்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா. இந்தியாவிலேயே பெண்கள் அதிகம் பேர் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். எல்லாவற்றிலும் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பொதுப்போக்குவரத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பட்டியலிட்டால்…
2025 ஆம் ஆண்டு ஒருவழியாக முடிந்து 2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கிக் காத்து இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில நோய்த்தொற்றுக்கள் உருவாகி உலகையே உலுக்கி வந்திருக்கிறது. அப்படி 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேரை பாதித்த 5 நோய்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். கொரோனா காலத்திற்கு பிறகு உலகளாவிய அளவில் ஆரோக்கியத்திற்கு எதிராக மிகவும் சவால்களை சந்தித்து வருகிறோம். கொடிய நோய்களின் பாதிப்பு தொடர்ச்சியாக மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், 2025ம் ஆண்டில் பருவ காலங்கள் மாற, மாற வெவ்வேறு விதமான பருவ கால காய்ச்சல்கள் வந்து கொண்டே இருந்தன. குழந்தைகளும் அடிக்கடி பாதிப்பை ஏதிர்கொண்டனர். கடந்த 2025 ஆம் ஆண்டு அம்மை நோய் பிரச்சினையாலும் கணிசமான இந்தியா முழுவதிலும் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு சின்னம்மையோடு சேர்த்து தட்டம்மையாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர்.…
பணம் கேட்டு மிரட்டியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக்கிடம் பணம் கேட்டு மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர், கடந்த வாரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், சவுக்கு சங்கருக்கு சிகிச்சை வழங்க அனுமதி கோரி அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இதய நோய், நீரழிவு நோயில் சவுக்கு சங்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளார். அதேபோல சவுக்கு சங்கரை தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்தும் அவரது தாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் பி. தனபால் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு இன்று முதல் 2026 மார்ச் 25ஆம் தேதி வரை இடைக்கால…
வரும் பொங்கலுக்குள் 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தரத்திற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பணிநிரந்தரம் கோரி கடந்த வாரம் MRB செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுதொடர்பாக உடனடியாக தலையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், MRB நர்ஸ்களுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்திருந்தார். இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம், பணி மாறுதல் மூலம் 31 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி செவிலியர்களுக்கான பணி மூப்பு பட்டியல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 169 செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் ஆணைகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் பொது மருத்துவம்…
தமிழக அரசியல் சூழல் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரின் தேர்தல் தயாரிப்பில் ஏற்பட்ட சமீபத் தகவல் பலரின் கவனத்தையும் மையப்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய தேர்தல் சின்னம்: திமுகவுக்கு எதிரான வியூகங்களை தீட்டி வரும் விஜய், தனது கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சிக்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கப் போகிறது என்பது குறித்து அதிக ஆர்வம் காணப்பட்டது. விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களைத் தேர்வு செய்யும் முன்மனுவை தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அக்கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளார் என்றும் கூறப்பட்டது.…
நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்கொயரில் இந்த வாரம் “Jesus is Palestinian” (இயேசு ஒரு பாலஸ்தீனியர்) என்ற வாசகத்துடன் ஒரு விளம்பர பலகை நிறுவப்பட்டது. இது கிறிஸ்துமஸ் காலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பரத்தை அமெரிக்க–அரபு எதிர்ப்பு வேற்றுமை ஒழிப்பு குழு (American-Arab Anti-Discrimination Committee – ADC) நிறுவியது. பலர் இதைத் தூண்டிவிடும் (inflammatory) செய்தியாகக் கூறி விமர்சித்துள்ளனர். குறிப்பாக பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். ஒரு சமூக ஊடக பயனர், “ஒரு அமெரிக்க நகரத்தில் இப்படியான விளம்பரத்தைப் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது” என்று எழுதியுள்ளார். மற்றொருவர், “இவ்வளவு பரபரப்பான இடத்தில் இப்படியொரு அழகான செய்தியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறியுள்ளார். இதற்கிடையில், ADC அமைப்பின் தேசிய நிர்வாக இயக்குநர் அடெப் ஆயூப், தனது அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து டைம்ஸ் ஸ்கொயரில் விளம்பர இடத்தை வாடகைக்கு எடுத்து வருவதாகவும், அந்த விளம்பரங்களை வாரந்தோறும்…
இந்திய ராணுவம் சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் தொடர்பாக ஒரு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் இன்ஸ்டாகிராமைப் பார்க்கவும் கண்காணிக்கவும் பயன்படுத்தலாம், ஆனால் எந்தவொரு உள்ளடக்கத்தையும் இடுகையிடுவது, கருத்து தெரிவிப்பது அல்லது லைக் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை குறித்து இராணுவம் தனது அனைத்து கள அமைப்புகள் மற்றும் பிரிவுகளுக்கும் தகவல் அளித்துள்ளதாகவும், அதை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய இராணுவம் சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக சமூக ஊடக பயன்பாடு குறித்து ஒரு குறிப்பிட்ட கொள்கையைக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ், இந்திய வீரர்களுக்கு ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் குறைந்த அணுகல் மட்டுமே உள்ளது. இப்போது, இன்ஸ்டாகிராமும் இந்தக் கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற முக்கிய சமூக ஊடக தளங்களைப் போலவே, இன்ஸ்டாகிராமையும் தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தலாம். வீரர்கள் தவறான…