Author: Editor web3

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலா எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகத்தை கடந்த டிசம்பர் 15ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்தநிலையில், தற்போது அதிமுகவில் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தங்களுடைய விருப்ப மனுக்களை தலைமைக் கழகத்தில் 15.12.2025…

Read More

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன. கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் என அனைத்து ஆயத்த பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தநிலையில் அதிமுகவிடம், 50க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என்று பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 170 தொகுதிகளில் போட்டியிடுவதில் அதிமுக உறுதியாக இருந்த போதிலும், பாஜக அதிக சட்டமன்ற இடங்களுக்கு உரிமை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் இந்த நிலைப்பாடு அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 64 இடங்களை மட்டுமே விட்டுச் செல்லும். டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்ற அதிமுகவுடனான சந்திப்பில் பாஜக 50க்கும் மேற்பட்ட இடங்களை கோரியுள்ளது. தி.நகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார், அதைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மூத்த தலைவர்களும்…

Read More

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே, 2026 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பாவு, ஜனவரி 20 ஆம் தேதி பேரவையை கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அன்றைய தினம் நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில் ஆளுநர் ரவி, தனது உரையை புறக்கணித்தது தொடர்பாக எழுப்பப் பட்ட கேள்விக்கு, தமிழக சட்டமன்றத்தின் மரபு எதுவும் எனவும், அதனை ஆளுநர் ரவி மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சபாநாயகர்…

Read More

FIDE உலக ரேபிட்&பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்குகிறது. மின்னல் வேக காய் நகர்த்தலுக்கு பெயர்போன இப்போட்டியில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனானன் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகியோர் களமிறங்குகின்றனர். ஓபன் பிரிவில் பிளிட்ஸ் மற்றும் ரேபிட் ஆகிய இரண்டு வடிவங்களிலும் முதல் நிலை வீரராக கார்ல்சன் உள்ளார். இந்திய நட்சத்திர வீரர்களும் கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் இந்தப் போட்டிக்குத் தயாராகி வருகின்றனர். நடப்பு உலக சாம்பியனான டி குகேஷ் தனது பழைய ஃபார்மை மீட்டெடுக்க முயற்சிப்பார். அர்ஜுன் எரிகைசி மற்றும் ஆர் பிரக்ஞானந்தா போன்ற மற்ற இந்திய வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலக்கு கொண்டுள்ளனர். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் (திறந்த பிரிவு) போட்டிகளில் இந்தியா சார்பில்  29 வீரர்களும், மகளிர் பிரிவில் மேலும் 13 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். கோனேரு ஹம்பி(Koneru Humpy…

Read More

ஆஷஸ் கிரிக்​கெட் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது இங்​கிலாந்து அணி, ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 5 போட்​டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. முதல் 3 போட்​டிகளி​லும் ஆஸ்​திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்​கில் கைப்​பற்​றி​விட்​டது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 4-வது கிரிக்​கெட் டெஸ்ட் போட்டி புகழ்​பெற்ற மெல்​பர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. கிறிஸ்​து​மஸ் பண்​டிகை நாளுக்கு அடுத்த நாள் இப்​போட்டி தொடங்​கு​வ​தால் பாக்​ஸிங் டே டெஸ்ட் போட்​டி​யாக இது அமை​கிறது. எனவே, ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை.  தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 12 ரன்களிலும், ஜேக் வெதரால்ட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்,…

Read More

கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக இந்திய துணைத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. ஹைலேண்ட் க்ரீக் டிரெயில் மற்றும் ஓல்ட் கிங்ஸ்டன் சாலை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் ஷிவாங்க் அவஸ்தி கொல்லப்பட்டதாக டொராண்டோ காவல்துறை  தெரிவித்துள்ளது. மரணம் குறித்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும், தேவையான உதவிகளை வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் துக்கமடைந்த குடும்பத்தினருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, டொராண்டோ சன் அறிக்கையின்படி, துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவரைக் கண்டுபிடித்ததாகவும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். போலீசார் வருவதற்கு…

Read More

கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக பாமகவில் இருந்து ஜி.கே. மணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, பா.ம.க. தலைமை நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30&இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள்…

Read More

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.26) பவுனுக்கு ரூ.660 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அன்றாடம் விலை உயர்ந்து வருகிறது. சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.26) தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,03,120 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.254-க்கும்,…

Read More

இன்றைய வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களின் வாழ்க்கையில் புற்றுநோய் தீவிரமாகியுள்ளன. புற்றுநோய் என்று ஒற்றை வார்த்தையில் இந்த நோயை சொல்லிவிட முடியாது. 100க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளன. உடலில் தொடங்கும் இடம் மற்றும் திசுக்களின் வகையை பொறுத்து இவை வகைப்படுத்தப்படுகிறது. எனினும் பொதுவான புற்றுநோய்களாக மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இரத்த புற்றுநோய், கருப்பை தொடர்பான புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் என பலவகையான புற்றுநோய்கள் உள்ளன. புற்று நோய் பாதிப்பு, அதன் தீவிரம், சிகிச்சை பொறுத்து உயிர்வாழும் காலம் மாறுபடலாம் என்பதால் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதும் சிகிச்சையும் அவசியம். தற்போது புற்றுநோய்க்கு கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ரேடியேஷன், ஹார்மோன் சிகிச்சைக்கு போன்ற முக்கிய சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இருப்பினும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கேன்சர் தடுப்பூசி தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இருப்பினும் இந்த கேன்சருக்கான ஊசி எப்போது பயன்பாட்டுக்கு வரபோகிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தநிலையில் தினமும் இந்த…

Read More

தேர்தல் நெருங்கும்போது ICE (IT, CBI, ED) அமைப்புகளை களமிறக்குவதை பாஜக வழக்கமான தேர்தல் வியூகமாக வைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். TOI-க்கு அவர் அளித்த பேட்டியில், 2026ல் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அரசாங்கம் அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் அனைவருக்கும் சேவை செய்கிறது, அதே நேரத்தில் பாஜக தமிழ் பேசுபவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டிய அவர், வருமான வரி, சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்தை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 2026 தேர்தலில் திராவிட சித்தாந்தம் மற்றும் இந்துத்துவா இடையே போட்டி இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, தமிழ்நாட்டில் , பெரும்பான்மையானவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள், இருப்பினும் வழிபாட்டு முறைகள் வேறுபடுகின்றன. ஒரு தெளிவான கருத்தும் உள்ளது . மதம் அரசியலுடன் கலக்கக்கூடாது, தனிப்பட்ட முறையில், பகைமைக்கு ஒரு காரணம் அல்ல. இது மக்களை வாழ அனுமதித்துள்ளது என்று கூறினார். தமிழ்நாட்டில் தேர்தல்கள் இந்துத்துவா மற்றும் திராவிட…

Read More