Author: Editor web3

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது. இதனை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வாக்காளர்கள் தங்களின் பெயர்கள் விடுபட்டதாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி, அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27-ந்தேதி (நாளை), 28-ந்தேதி (நாளைமறுநாள்) மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம் 6 ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து  தங்கள் பெயரை சேர்க்க…

Read More

லிபிய மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் துருக்கி தலைநகர் அங்காரா அருகே விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த எட்டு பேரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமான விபத்தில் பலியானவர்களில்  லிபியாவின் உயர் இராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல்-ஹதாத்தும் ஒருவர் , இவருடன் சேர்த்து நான்கு மூத்த லிபிய இராணுவ அதிகாரிகள், மூன்று குழு உறுப்பினர்கள் என 8 பேர் பலியாகினர். இந்த சம்பவம் விமானப் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, லிபியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்புக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அடியாக அமைந்தது.  மேலும் அங்காராவின் எசன்போகா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது , பல விமானங்கள் மாற்று இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. துருக்கிய மற்றும் லிபிய அதிகாரிகள், இந்த விமான விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை மாலை , உள்ளூர் நேரப்படி இரவு 8:30 மணியளவில் அங்காராவின் எசன்போகா விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது…

Read More

பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு தற்போது வெளியிடாமல் இருப்பதால் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் இந்தாண்டு பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே, பொங்கலுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில் இதுதொடர்பாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கூறியுள்ளார். மேலும்,அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. விடுமுறை என்பது மாணவர்களின் புத்துணர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தி விடக்கூடாது என கூறினார். மேலும், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அவர்கள் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் ஜனவரி 6-ம் தேதிக்குள் அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தியை நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Read More

தந்தை பெரியாரின் 52வது நினைவு  நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கு மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாருக்கு பனையூர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக ,எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன். தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.

Read More

விஜய் ஹசாரே டிராபியின் தொடக்க ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, ஏபி டிவில்லியர்ஸின் 10 ஆண்டுகால பேட்டிங் சாதனையை முறியடித்தார். விஜய் ஹசாரே டிராபி 2025-26 இன்று (டிசம்பர் 24) தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டி பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இடையே ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச கிரிக்கெட் மைதான வளாகத்தில் நடைபெறுகிறது, இதில் பீகாரின் துணை கேப்டன் வைபவ் சூரியவன்ஷி தனது லிஸ்ட் ஏ வாழ்க்கையில் அதிக ஸ்கோரைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம், ஏபி டி வில்லியர்ஸின் 10 ஆண்டுகால சாதனையை 10 பந்துகள் வித்தியாசத்தில் முறியடித்துள்ளார்.  மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் பீகார் அணிக்காக அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த சாதனையையும் படைத்துள்ளார். ராஞ்சியில் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக பேட்டிங் செய்து 84 பந்துகளில் 190 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸில்,…

Read More

100 நாள் வேலை திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும் VB-G Ram G திட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. செனையில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மத்திய அரசு, அதிமுகவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல்,அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் விவேகாநந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் திமுக தலைமை நிர்வாககுழு உறுப்பினர் மீ.ஆ.வைதியலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யுனிஸ்ட் கட்சிகள் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெண்கள்…

Read More

பிரபல பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கைச் சுற்றியுள்ள விவாதம் அமெரிக்காவில் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. செவ்வாயன்று, அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் தொடர்பான பல புதிய கோப்புகளை வெளியிட்டது. இவற்றில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றஞ்சாட்டும் கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு கடிதமும் இருந்தது. இருப்பினும், அந்தக் கடிதம் போலியானது என்றும் அதில் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்றும் நீதித்துறை தெளிவுபடுத்தியது. நீதித்துறை விளக்கம்: நீதித்துறை ஒரு அறிக்கையில், இந்த குறிப்பிட்ட கடிதத்தின் உள்ளடக்கங்கள் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று கூறியது. இந்த ஆவணத்தை எந்த வகையிலும் உண்மையானதாகக் கருதக்கூடாது என்று தெளிவுபடுத்தியது. கடிதம் வெளியானதைத் தொடர்ந்து, இதுபோன்ற சரிபார்க்கப்படாத ஆவணங்களை வெளியிடுவது தவறான தகவல்களுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் எழுந்தன. இதன் விளைவாக, எந்தவொரு ஆவணத்தையும் உண்மையானதாக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அதைச் சரிபார்ப்பது அவசியம் என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் கடிதம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையில் இருந்தபோது ஆகஸ்ட்…

Read More

கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைனுடனான போர் நிறுத்தம் செய்ய புதின் மறுப்பு தெரிவித்தது தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக போப் லியோ தெரிவித்துள்ளார். உக்ரைன் , ரஷ்யா இடையே இன்றுடன் சுமார் 1 ஆயிரத்து 400வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சம்பந்தப்பட்ட இராஜதந்திர முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் தென்படவில்லை. ரஷ்யாவின்  தொடர் வான்வழித் தாக்குதல்கள் அரங்கேறும் நிலையில், போப் 14வது லியோ, கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகளாவிய போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை விடுத்துள்ளார். மேலும், ரஷ்யா இந்த…

Read More

அ​தி​முக – பாஜக கூட்​ட​ணி​யின் முதலமைச்​சர் வேட்​பாள​ராக பழனி​சாமி அறிவிக்​கப்​பட்​டு​விட்ட நிலை​யில், திமுக கூட்​ட​ணியை வீழ்த்த பலமான கூட்​ட​ணியை உரு​வாக்​கு​வதற்​காக பகீரதப்​பிர​யத்​தனம் செய்து வரு​கிறது பாஜக. அதன் ஒரு பகு​தி​யாக, அதி​முக-​வில் இருந்து நீக்​கப்​பட்ட சசிகலா, டிடி​வி.​தினகரன், ஓபிஎஸ் ஆகி​யோரை மீண்​டும் கட்​சிக்​குள் கொண்டு வர பாஜக மட்​டுமல்​லாது பலரும் முயற்சி எடுத்​தனர்; இன்​னும் எடுத்து வரு​கின்​ற​னர். இருந்த போதும் இவர்​களை கட்​சிக் குள்​ளும் கூட்​ட​ணிக்​குள்​ளும் சேர்க்க முடி​யாது என்​ப​தில் பழனி​சாமி பிடி​வாத​மாக இருக்​கி​றார். இந்தநிலையில், நேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் சென்னை வந்திருந்தார். பின்னர், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்தப் பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்பட்டது. அதில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு…

Read More

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும். புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம்…

Read More