Author: Editor web3
தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து வேலைவாய்ப்பு, மகளிர் உரிமை, விவசாயங்களை பாதுகாப்பது,மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கி திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி தலைமையில் மொத்தம் 12 பேர் அடங்கிய தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறோம் யாரையெல்லாம் சந்திக்க உள்ளோம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.திமுக தேர்தல் அறிக்கை முதலமைச்சர் உடைய ஆலோசனைகளை பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கொண்டு உருவாக்கப்படும். வேலை வாய்ப்புகள் ,மகளிர் உரிமை,விவசாயிகளை பாதுகாப்பது,மத்திய அரசாங்கம் வேலைவாய்ப்பை பறிப்பதை ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில் வேலை…
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் வார தொடக்க நாளான இன்று காலையில் தங்கம் விலை உயர்ந்தது. இந்தநிலையில் மீண்டும் உச்சத்தை எட்டி, ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். (டிச.22) இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்து ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா – உக்ரைன் இடையே தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க அதிபர் டிர்ம்பும் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார். இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்தநிலையில், ரஷ்ய அதிபர் புதின் இராணுவத்தின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடந்த சந்தேகத்திற்குரிய கார் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார் . 56 வயதான சர்வரோவ், ஆயுதப்படைகளின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவராக இருந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், உக்ரைனிய உளவுத்துறை அமைப்புகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் உக்ரைன் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய ஊடகங்களின்படி, “ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாட்டு பயிற்சித் துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் ஃபனில் சர்வரோவ், யசெனேவயா தெருவில் வெடிகுண்டு வீசப்பட்டு…
கில் ஒருநாள் கேப்டன் பதவியை இழக்கக்கூடும் என்றும், ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷுப்மன் கில்லுக்கு சிக்கல்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த ஆண்டில் அவர் முதலில் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், பின்னர் ஒருநாள் (ODI) அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். கூடுதலாக, டி20 அணியின் துணை கேப்டன் பொறுப்பையும் அவர் வகித்தார். ஆனால், டிசம்பர் 20ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பட்டியலில், ஷுப்மன் கில்லின் பெயர் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரிடமிருந்து ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு பறிக்கப்படலாம் என்றும், அதற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய இரண்டிலும் அணிகளை வழிநடத்திய அனுபவம் ஷ்ரேயாஸுக்கு உள்ளது. இதனால், அவரை தலைமைப் பொறுப்புக்கு…
மாணவர் தலைவர் ஷெரீப் ஒஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் தலைவர் முகமட் மொடலெப் சிக்தர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 2024 மாணவர் இயக்கத்தில் முக்கிய நபரான ஒஸ்மான் ஹாடி இறந்த சில நாட்களிலேயே, இன்று (திங்கள் கிழமை) மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம், ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் வங்கதேசத்தின் அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. டெய்லி ஸ்டார் பத்திரிகையின் செய்தியின்படி, தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) தலைவர் மொதலேப் சிக்தர் திங்களன்று குல்னாவில் சுடப்பட்டார். தாக்குதல் நடத்தியவர்கள் அவரை நேரடியாகத் தலையில் குறிவைத்து சுட்டனர். மொதலேப், தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா பிரிவுத் தலைவராகவும், தேசிய குடிமக்கள் கட்சி தொழிலாளர் சக்தியின் மத்திய அமைப்பாளராகவும் உள்ளார். இது இந்த மாதத்தில் இளைஞர் தலைவர்…
ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு எல்லாம் முடிந்துவிடுகிறது, ஆனால் உறுப்பு தானம் என்பது ஒருவரை மரணத்திற்குப் பிறகும் பலரது வாழ்வில் உயிருடன் வைத்திருக்க உதவும் ஒரு வழியாகும். அரசாங்கமும், சமூக அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் உறுப்பு தானம் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இதன் விளைவால், நாடு முழுவதும் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழ்நாட்டில், கடந்த சில ஆண்டுகளாக மரணத்திற்குப் பிறகு உறுப்புகளை தானம் செய்பவர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. முக்கியமாக, இந்த அதிகரிப்பானது இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் புரிதல் மற்றும் சம்மதத்தால் உந்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, உறுப்பு தானம் குறித்த மக்களிடையே உள்ள விழிப்புணர்வு வேகமாக அதிகரித்துள்ளது என்பது தெளிவாகிறது. 2021: 60 இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன…
திருப்பரங்குன்றம் மலை மேல் பக்தர்கள் செல்ல 20 நாட்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது, மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில்…
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மேலும் அவரின் உடல்நிலைக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், இன்று அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அவருக்கு இரத்த பரிசோதனைகள், இசிஜி உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, விரையில் இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னதாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி சென்னை சிவனாந்தா சாலையில் தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராடத்தை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தில் பல்வறேு மாவட்டங்களில் இருந்து வந்த செவிலியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அன்றயை தினமே காவலர்கள் இவர்களை கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலைத்திற்கு அழைத்து அந்தெந்த மாவட்டத்திற்கு அவர்களை போக சொல்லி அறிவுறுத்தினர். ஆனால் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்வோம் என கூறி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதன் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் செவிலியர்கள் ஈடுபட்ட செவிலியர்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்பு அமர்ந்து தொடர் போராட்டத்தை…
திமுகவிற்கு எதிராக ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் கூட்டணிக்கு வரலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம். இதுதான் திமுக ஆட்சியின் கடைசி ஆண்டு இதற்கு மேல் திமுகவால் ஆட்சிக்கு வரமுடியாது என்று கூறினார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தியதை திமுக அரசுக்கு பாராட்ட மனமில்லை. 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை மத்திய அரசு செய்துள்ளது என்று கூறினார். 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை மாற்றியதை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை மத்திய அரசு மறுபரிசீலனை…