Author: Editor web3
யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சிகளில் இணைய தொடங்கி இருக்கின்றனர். எந்த தேர்தலையும் சந்திக்காத கட்சி நடிகர் விஜய்யின் தவெக. வரும் தேர்தலில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதி பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இந்தநிலையில், செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் வரிசையில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார், கட்சியில் இணைந்த உடனேயே அவருக்கு தேசிய பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுமாறு ஃபெலிக்ஸுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை பெரும் பிழையை செய்துள்ளதாகவும், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனின் 78வது பிறந்தநாளையொட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு. நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார். சட்ட விரோதமான பணம் பரிமாற்றம் தான் குற்றம். காவல்துறை வழக்கு பதிவு செய்து குற்றச்சாட்டு வைக்க வேண்டும் ஆனால் இந்த வழக்கில் காவல்துறை அல்லது புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறை பதிவு செய்வது சட்ட விரோதம். இது எப்ஐஆர் அல்ல தனிப்பட்ட குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் கழித்து 2021ல் அமலாக்கத்துறை…
நாட்டில் போலி பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக UGC எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தற்போது மேலும் 3 கல்வி நிறுவனங்களைப் போலிப் பட்டியலிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள மொத்த போலிப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ், கர்நாடகாவில் உள்ள சர்வ பாரதிய சிக்ஷா பீடம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நேஷனல் பேக்வார்ட் கிருஷி வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறாத போலியான நிறுவனங்கள் என்று UGC தெரிவித்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளோமா சான்றிதழ்கள் எதற்கும் அங்கீகாரம் கிடையாது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு மேல் படிப்பிற்கோ அல்லது வேலைவாய்ப்புக்கோ விண்ணப்பிக்க முடியாது. மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னால், அந்த நிறுவனம் UGC-ஆல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை…
இந்தியாவின் அண்டை நாடான சீனா ஒரு பெரிய தங்கச் செல்வத்தை கண்டுபிடித்துள்ளது. முதன்முறையாக, சீனா கடலுக்கடியில் உள்ள தங்க கையிருப்புகளை கண்டறிந்துள்ளது. இந்த மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஷான்டோங் மாகாணத்தின் லைஜோ (Laizhou) கடற்கரைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புடன், லைஜோ பகுதியில் உள்ள மொத்த தங்க கையிருப்பு 3,900 டன்னைக் (137.57 மில்லியன் அவுன்ஸ்) கடந்துள்ளது. இது சீனாவின் மொத்த தங்க கையிருப்பின் சுமார் 26 சதவீதமாகும். இதன் மூலம், தங்க கையிருப்பிலும் தங்க உற்பத்தியிலும் சீனா தற்போது உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. யாந்தாய் (Yantai) மாகாண அரசு, தற்போதைய ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பெற்றுள்ள சாதனைகளை எடுத்துரைக்கவும், அடுத்தகட்டத் திட்டங்களை விளக்கவும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இந்த தங்கக் கையிருப்பு கண்டுபிடிப்பு சீனாவிற்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனா மதிப்புமிக்க உலோகங்களை தீவிரமாக தேடி வந்த நிலையில், இந்த கண்டுபிடிப்பு அதற்கான…
மதச்சார்பின்மை என்ற கருத்தை பாஜக ஏற்கவில்லை என்றும், அதை அரசியலமைப்பிலிருந்து நீக்க விரும்புகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பேசிய அவர், பாஜகவைப் பொறுத்தவரை, மதச்சார்பின்மை வேப்பம் பழத்தைப் போல கசப்பானது என்று கூறினார். இந்தியாவின் உண்மையான பலம் அதன் பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர சகோதரத்துவத்தில் உள்ளது என்று கூறிய முதலமைச்சர், சில சக்திகள் அதை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. கிறிஸ்துமஸ் என்பது வெறும் மதப் பண்டிகை மட்டுமல்ல, இரக்கம், அன்பு மற்றும் அமைதியின் சின்னம் என்றும் கூறினார். இந்தியா போன்ற பல மதங்களைக் கொண்ட நாட்டில், இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் சகவாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் சமூகத்தில் பரஸ்பர புரிதலையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துகின்றன. முதலமைச்சர் தனது உரையில், தென் தமிழ்நாட்டில் பெண் கல்விக்கு அடித்தளமிட்ட 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கிறிஸ்தவ சமூக…
இன்று உலகம் முழுவதும் உலக சேலை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தில், சேலை என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது பாரம்பரியம் மற்றும் அடையாளத்தின் சின்னமாகும். கோவில்கள் முதல் திருமணங்கள் வரையிலும், அன்றாட வாழ்க்கை வரையிலும், சேலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமல் நிலைத்து நிற்கிறது. ஆனால், சேலையை முதன்முதலில் அணிந்தவர் யார்? என்பது குறித்த சுவாரஸியமான தகவலை தெரிந்துகொள்வோம். உண்மையில், சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பெண்களே சேலையின் (sari) ஆரம்ப வடிவத்தை முதலில் அணிந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர். மோஹெஞ்சோ-தாரோ போன்ற தொல்லியல் தளங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் உருவங்களில், பெண்கள் தையல் செய்யப்படாத துணியை இடுப்பைச் சுற்றியும் தோள்களில் போர்த்தியும் அணிந்திருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. இதன் அடிப்படையில், சேலையின் தோற்றம் கிமு 2800 முதல் 1800 வரை (BCE) காலப்பகுதியில் உள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சேலை என்ற சொல்லின் தோற்றம்: சேலை என்ற சொல், துணியின் ஒரு பட்டை…
மத்திய அரசு, எல்லைப் பாதுகாப்புப் படையின்(BSF) பொதுப் பணிப் பிரிவு தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து, அதன் ஆட்சேர்ப்பு முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துள்ளது. 1968 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ‘எல்லைப் பாதுகாப்புப் படை, பொதுப் பணிப் பிரிவு (அலுவலர் அல்லாதோர்) ஆட்சேர்ப்பு (திருத்த) விதிகள், 2025’ எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய விதிகள், டிசம்பர் 18, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மிகப்பெரிய பலன், அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய இளைஞர்களுக்குக் கிடைக்கும். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர ஆட்சேர்ப்பு செயல்முறையில் உள்ள காலிப் பணியிடங்களில் பாதி இனி முன்னாள் அக்னிவீரர்களுக்காக ஒதுக்கப்படும். இது, ஏற்கனவே பயிற்சி பெற்ற மற்றும் ஒழுக்கமான இளைஞர்களுக்குப் பாதுகாப்புப் படைகளில் ஒரு நிரந்தரமான பணியைப் பெறுவதற்கான வாய்ப்பை…
அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்திலிருந்து எப்ஸ்டீன் தொடர்பான பதினாறு கோப்புகள் மர்மமான முறையில் மறைந்துவிட்டன. 24 மணி நேரத்திற்குள் டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களும் நீக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீனைச் சுற்றியுள்ள சர்ச்சை மீண்டும் அமெரிக்காவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் அமெரிக்க நீதித்துறையின் (DOJ) அதிகாரப்பூர்வ பொது வலைத்தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் வெறும் தொழில்நுட்பப் பிழையா அல்லது ஒரு குறிப்பிடத்தக்க உண்மையை மறைக்கும் முயற்சியா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தக் கோப்புகள் ஒரு நாள் முன்னதாகவே இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும், மறுநாள் அவை முற்றிலும் மறைந்துவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது. நீக்கப்பட்ட பதிவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புகைப்படம் இருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது. சர்ச்சைக்கு வழிவகுத்த, அகற்றப்பட்ட பதிவுகள் என்னென்ன? பொது வெளியில் இருந்து நீக்கப்பட்ட ஆவணங்களில், எப்ஸ்டீனின் தனிப்பட்ட சொத்துகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பல புகைப்படங்களும் கோப்புகளும் இடம்பெற்றிருந்தன. அவற்றில்,…
கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) அமலுக்கு கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி, ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது. இந்தப் பெயர் மாற்ற மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மகாத்மா காந்திக்கு பதிலாக ‘ராம்’ என்ற பெயர் சேர்ப்புக்கு எதிர்ப்பு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பல்வேறு நுணுக்கமான உட்பிரிவுகள் மூலம் இச்சட்டம் சிதைப்பதால் எதிர்ப்பு என இரண்டு விஷயங்களை…
நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் திமுகவை எதிர்த்து பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என நினைப்பதாக விஜய்யை தாக்கி ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார், சென்னை கொருக்குப்பேட்டையில் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பேசிய அவர், 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகதான் ஆட்சிக்கு வரும் என அனைத்து தரப்பினரும் இப்போதே பேசத் தொடங்கி விட்டனர். அந்த பயத்தால்தான் பழனிசாமி என்ன பேசுவது என்று தெரியாமல் உளறி வருகிறார். திமுகவை எதிர்த்து பேசினால் பெரிய ஆளாகிவிடலாம் என நேற்று முளைத்த காளான்கள் வெறி கொண்டு பேசுகின்றனர். திமுக என்பது பெரிய மலை போன்றது. மலையைப் பார்த்து யார் கத்தினாலும், மோதினாலும் சேதாரம் எதிரிக்குத்தான். தொண்டர்கள் கவனம் இனி ஒரு மாதத்துக்கு, வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், அதிமுக, பாஜகவினர் போலியாக சேர்த்துள்ளவர்கள் பெயர்களை கண்டறிந்து நீக்குவதிலும் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், எஸ்ஐஆர் கணக்கெடுப்பின்படி தற்போது…