Author: Editor web3
இந்த போட்டோவை பாருங்க என்று நண்பர்களிடம் இருந்து வரும் லிங்கை கூட கிளிக் செய்யாதீர்கள் அது உங்கள் கணக்கை முடக்கும் Ghostpairing மோசடியாக இருக்கலாம் என்று CERT-In எச்சரித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள் என பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற சைபர் மோசடிகளில் சிக்கி 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் இந்தியர்கள் பணத்தை இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த மோசடிகள் பெரும்பாலும், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் தளங்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், தற்போது புதிய மோசடி ஒன்று பரவி வருகிறது. அதாவது, இந்த போட்டோவை பாருங்க என்று நண்பர்களிடம் இருந்து வரும் லிங்கை கூட கிளிக் செய்யாதீர்கள் அது உங்கள்…
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாகியுள்ள நிலையில், மறுபுறம் மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதனடிப்படையில், திமுக – அதிமுக என இரு கட்சிகளிமும் ஒரே நேரத்தில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திவருதாக கூறப்படுகிறது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, வருகின்ற ஜனவரி 9 – 2026 மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 கடலூரின் பாசார் கிராமத்தில் நடக்க இருக்கின்ற நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து தரவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார். இதையடுத்து, கூட்டணி தொடர்பான முடிவும் அந்த மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், பிரேமலதாவிடம் தேமுதிக-விற்கு ராஜ்யசபா சீட் தர அதிமுக – திமுக இருக்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியினர் அதிக இடம் தருகிறார்களோ? அவர்களுடனே கூட்டணி என்று தேமுதிக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது…
கள்ள ஓட்டு தொடர்பான நயினார் நாகேந்திரனின் கருத்து செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி கே.பழனிசாமி செய்த ஆட்சிபோல் தற்போது இல்லை. தமிழகத்தில் திமுக எப்போதும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததில்லை. கடந்த தேர்தலில் சில முறைகேடுகள் காரணமாக மட்டுமே திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது, போலி வாக்குகளைத் தடுக்க பாஜகவும் அதிமுகவும் இணைந்து வாக்குச் சாவடி குழுக்களை அமைத்துள்ளோம். இனி ஒரு கள்ள ஓட்டு கூட போட முடியாது என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்திருந்தார். இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்றார். மேலும், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் கூட எந்தாண்டு சேர்க்கப்பட்டவர்கள்? இதை முழுவதும் செய்வது தேர்தல் ஆணையம். வழிகாட்டு முறைகளை கொடுப்பதே தேர்தல் ஆணையம். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ, அந்த பணியை…
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலர் ஒரு பெரிய தவறைச் செய்கிறார்கள் — காலை உணவைத் தவிர்ப்பது. காலை உணவை விட்டுவிட்டால் அது தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் உடல்நலத்திலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மக்கள் அடிக்கடி யோசிக்கிறார்கள். சிலர் காலை உணவை தவிர்ப்பது ஒரு உணவை குறைப்பதற்குச் சமம், அதனால் எடை குறைய உதவும் என்றும் நம்புகின்றனர். சிலருக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அதை உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து நீக்கினாலோ, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். ஆரோக்கியமான காலை உணவை உண்பது நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது நாள் முழுவதும் வேலை செய்வதற்கும் கடினமாக உழைப்பதற்கும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது, இதனால் வேலை செய்யும் போது உங்கள் உடல் சோர்வடைவதில்லை. 2018 ஆம்…
VB-G RAM G மசோதாவை ஒரு “கருப்பு சட்டம்” என்றும் MNREGA-வை பலவீனப்படுத்துவது ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, வீடியோ வெளியிட்டுள்ள சோனியா காந்தி, இந்தச் சட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MNREGA) அடிப்படைக் நோக்கத்தையே பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், புதிய VB-G RAM G மசோதையின் கீழ், யாருக்கு எவ்வளவு வேலை வழங்கப்பட வேண்டும், அது எங்கு வழங்கப்பட வேண்டும் என்பதனை முழுமையாக மத்திய அரசே தீர்மானிக்கும். இது தரைமட்ட யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளாத, அவற்றுடன் தொடர்பற்ற அணுகுமுறையாகும் என அவர் விமர்சித்தார். கடந்த 20 ஆண்டுகளாக (MNREGA) திட்டம் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உறுதி செய்து வந்த நிலையில், இந்த நடவடிக்கை ஏழைகள் மற்றும் விவசாயிகளின் சட்டபூர்வ உரிமைகள்மீதான தாக்குதலாகும் என்று சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மசோதாவில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு…
தோஷாகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மற்றொரு வழக்கில் 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி இருவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் முன்னதாக, சிறையில் அவர் துன்புறுத்தப்படுவதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு உயர்தர வசதிகள் வழங்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. இவரை தனிமை சிறையில் இருந்து விடுவிக்க ஐநா சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்டகால சிறை தண்டனை இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கையில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
SIR மூலமாக நீக்கப்பட்ட சுமார் ஒரு கோடி வாக்காளர்களில் 50 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் என்று சீமான் சாடியுள்ளார். இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், SIR மூலமாக ஒரு கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. இது எப்படி திருத்தம் என்று சொல்ல முடியும். குறுகிய காலத்தில் விடுபட்ட வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து எப்படி மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியும். எப்படியும் பிப்ரவரியில் தேர்தல் அறிவித்துவிடுவார்கள். ஏற்கனவே டிசம்பர் மாதமும் முடிந்துவிட்டது, மக்களின் அடிப்படை உரிமையே வாக்கு மட்டும்தான். அதுவே கேள்விக்குறியாகி இருக்கிறது. பீகார் 81 லட்சம் வாக்குகள் எடுக்கப்பட்டது. இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகளவில் நீக்கப்பட்டது. தற்போது பாஜகவுக்கு எதிரான 40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், இரட்டை வாக்குகளை மட்டுமே நீக்க வேண்டும். இன்னும் 2 மாதத்தில் எப்படி இவ்வளவு வாக்குகளை சேர்க்க முடியும். வாக்காளர்கள் ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் போய், ஆட்சியாளர்கள் வாக்காளர்களை தேர்வு செய்யும் காலம் வந்துவிட்டது என்று விமர்சித்துள்ளார்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இந்த பட்டியல் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாத நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். ஆனால், இந்த பட்டியலில் 5 கோடியே 45 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் தான் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சுமார் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என…
திமுக எப்போதும் மக்கள் செல்வாக்குடன் ஜெயித்தது இல்லை என்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் சிறு கணக்கு பிழையால்தான் திமுக ஆட்சிக்கு வந்தததாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. இப்போது எங்கள் அண்ணன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஏதோ அம்மா உடன் இருப்பது போல் நினைத்து ஏதோ செய்துக்கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் அண்ணன் பாவம். அவருக்கு வேறு வழியில்லை. திமுக எப்போதுமே மக்கள் செல்வாக்கோடு ஜெயித்தது கிடையாது. 1967-க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரை அவர் தான் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு, கட்சி உடைந்ததனால் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த முறைகூட ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்தது. அதனால் இன்று 50 ஆயிரம் கோடிக்கு மேல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வரவுள்ளார்.…
வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக – பாஜக கடந்த ஏப்ரல் மாதமே கூட்டணியை அறிவித்துவிட்டன. இதனால் அதிமுகவில் பல முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதிமுகவில் நிலவிவரும் குழப்பங்களுக்கு மத்தியில் சமீபத்தில் செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இணைந்தார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில் செங்கோட்டையனுக்கு மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது, இருப்பினும் தேர்தல் வியூகங்களை வகுத்தும் வரும் அரசியல் கட்சிகள், ஒவ்வொரு கட்சிகளில் இருந்து மற்ற கட்சிகளில் இணைந்தும் வருகின்றனர். இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 4 பேரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கலுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மண்டபம் பேரூர் செயலாளர் சீமான் மரைக்காயர், மீனவர் பிரிவு இணைச் செயலாளர் சீனி காதர்மொய்தீன் நீக்கம். ராமநாதபுரம் மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலாளர் பக்கர் அதிமுகவில்…