Author: Editor web3
உலகின் மிகக் குளிரான நகரம் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பூமியில் பல குளிர் பிரதேசங்கள் உள்ளன, ஆனால் தீவிர வானிலை நிலைகளைப் பொறுத்தவரை, யாகுட்ஸ்க் முதலிடத்தில் உள்ளது. சைபீரியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த நகரத்தின் மக்கள் தொகை தோராயமாக 3,55,000 பேர் ஆகும். ஆண்டின் பெரும்பாலான நாட்கள் குளிர்காலம் நிலவுவதால், யாகுட்ஸ்கில் உள்ள வெப்பநிலை மனிதர்களின் சகிப்புத்தன்மை மற்றும் தகவமைப்பு வரம்புகளை மீறுகிறது. BBC Science Focus தகவலின்படி, யாகுட்ஸ்க் நகரில் ஜனவரி மாதத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை –42 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகிறது. மேலும், அந்த காலகட்டத்தில் நகரத்திற்கு தினமும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே சூரியஒளி கிடைக்கிறது. வரலாற்றில் யாகுட்ஸ்கில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 1891 பிப்ரவரி 5ஆம் தேதி –64.4 டிகிரி செல்சியஸ் ஆகும். ஆடைகள், கார்கள் உட்பட வெளியே விடப்படும் எந்தப் பொருளும் சில வினாடிகளிலோ அல்லது நிமிடங்களிலோ உறைந்துவிடுகின்றன.…
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, விருப்பமனு விநியோகம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், 12 பேர் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் – இளைஞர்கள் – விவசாய அமைப்புகள் – தொழிலாளர் அமைப்புகள் – தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த குழுவின்…
2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு தான் மனதளவில் உடைந்து போனதாகவும், கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு செய்ததாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா அற்புதமாக விளையாடியது. தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு அணி இறுதிப் போட்டியை எட்டியது. முழு நாடும் வெற்றியைக் கனவு கண்டது, ஆனால் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் சதம் இந்தியாவின் கனவைத் தகர்த்தெறிந்தது. அந்தத் தோல்வி ரோஹித்தை மிகவும் உலுக்கியது. 2022 இல் கேப்டன் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்வதே தனது ஒரே குறிக்கோள் என்று ரோஹித் விளக்கினார். இந்த இலக்கிற்காக அவர் பல மாதங்கள் அல்ல, பல ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். துர்திருஷ்டவசமாக அந்த போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. இதுகுறித்து பேசிய ரோகித்…
இந்தியா ஒரு இந்து தேசம் என்றும் இதற்கு எந்த அரசியலமைப்பு அங்கீகாரமும் தேவையில்லை என்று ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-இன் 100-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பகவத், இந்தியா ஒரு இந்து தேசம் என்றும், நாட்டில் இந்திய கலாச்சாரம் மதிக்கப்படும் வரை அது அப்படியே நீடிக்கும் என்றும் கூறினார். “சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இது எவ்வளவு காலமாக நடக்கிறது என்று நமக்குத் தெரியாது, அப்படியென்றால் இதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் தேவையா? இந்தியா ஒரு இந்து தேசம். இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதும் எவரும் இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். இந்திய மூதாதையர்களின் பெருமையை நம்பி மதிக்கும் ஒரே ஒரு நபராவது இந்திய மண்ணில் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து தேசமாகவே இருக்கும். இதுவே ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம்,” என்று கூறினார். நாடாளுமன்றம் அரசியலமைப்பைத் திருத்தி அந்த…
ஈரோட்டில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய்க்காக சேர்ந்த கூட்டத்தை பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகையும், ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் கடந்த 18ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவெளியில் பரப்புரை நிகழ்த்தினார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, பல்வேறு எதிர்பார்ப்புகள், சூழ்ச்சிகளுக்கிடையே நடந்த இந்த நிகழ்ச்சியில், தவெக தொண்டர்கள், பொதுமக்கள் என கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா, ஈரோட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது நிஜமாகவே ஷாக்காக இருந்தது என்று கூறியுள்ளார். நாங்க கவர்மெண்ட்ல முதலமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால், அதற்கு பல பேர் விடிய விடிய வேலை…
சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ சூழ்ச்சியை முயற்சிக்கின்றனர் ஆனால் அது என்றுமே தமிழகத்தில் வெற்றி பெறாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில், நேற்று ”அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா -2025” என்ற நிகழ்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒன்றிய பாசிச அரசு, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்ய முயற்சிக்கிறார்கள்; அவர்களின் முயற்சி என்றைக்கும் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது” என்றார். கிறிஸ்துமஸ் அன்று இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து கேக் அனுப்புவோம், ரம்ஜான் அன்று பிரியாணி வந்து விட்டதா என்று பார்ப்போம்; இதுதான் தமிநாட்டின் தனித்துவம். தமிழ்நாட்டுக்கு தனி கேரக்டர் இருக்கிறது” என்று பேசினார்.
மௌனம் உங்களை காப்பாற்றாது, இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள் என்று நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலன் காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், வங்க தேச வன்முறைக்கு எதிராக, முதல் பிரபலமாக நடிகை…
சென்னையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (டிசம்பர் 20), 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 229 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம்…
இந்து சாஸ்திரங்களின்படி, திருமணமான பெண்கள் குடும்பத்தின் லட்சுமியாகக் கருதப்படுகிறார்கள். பெண்கள் மேற்கொள்ளும் விரதங்கள் மற்றும் நற்செயல்களின் புண்ணியப் பலன்களைக் குடும்பம் முழுவதும் பெறுகிறது. இருப்பினும், பெண்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, திருமணமான பெண்கள் இந்த ஐந்து விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப தர்மம் செய்ய வேண்டும். இருப்பினும், திருமணமான பெண்கள் தானம் செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எதையாவது தானம் செய்யும்போது, இரு கைகளாலும் கொடுக்க வேண்டும்; இது வீட்டில் சுபீட்சத்தை அதிகரிக்கும். திருமணமான பெண்கள் குளித்த பிறகு ஈரமான கூந்தலில் குங்குமம் இடக்கூடாது. ஈரமான கூந்தலுடன் வகிடு எடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும், பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. திருமணமான பெண்கள் கண்ணாடி வளையல்கள், பொட்டு, குங்குமம் போன்ற தங்களின் மங்கலப் பொருட்களை யாருடனும் பகிர்ந்து…
பலர் வீட்டில் பல்வேறு வகையான செடிகளை வைத்திருக்கிறார்கள். இது வீட்டை பசுமையாகக் காண்பது மட்டுமல்லாமல், வீட்டின் உள்ளே இருக்கும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. பசுமையைப் பார்ப்பது மனநிலையைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மனம் அமைதி பெறுகிறது. வீட்டில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. செடிகள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால், சில நேரங்களில் சிலர் வாஸ்து படி சரியாக இல்லாத செடிகளை வீட்டில் நடுகிறார்கள். இந்த செடிகள் உங்கள் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், நிதி நெருக்கடி மற்றும் எதிர்மறையை அதிகரிக்க ஒரு காரணியாக மாறும். தாவரங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கை, மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தையும் குறிக்கின்றன. வாஸ்து சாஸ்திரம் உட்புற தாவரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் படி, சில தாவரங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகின்றன, அதே நேரத்தில் சிலவற்றை வீட்டில் வைத்திருப்பது அசுபமாகக் கருதப்படுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. வாஸ்து நிபுணர்கள் பெரும்பாலும் சில தாவரங்களை…