Author: Editor web3
உதட்டளவில் சமூகநீதி பேசி ஊரை ஏமாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை, பட்டியல் சமூக மக்கள், மாணவர்கள் முன்னேற்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காட்ட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தமிழகம் முழுவதும் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில், 100-க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் இருந்த 1,331 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில், தற்போது, 1,200 மாணவர் விடுதிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. 100-க்கும் அதிகமான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 98,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த விடுதிகளில், தற்போது, 65,000 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர் சுத்தமான அறைகள், சுகாதாரமான குடிநீர், தரமான உணவு என்ற அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்கப்படாததால், மாணவர்கள், இந்த விடுதிகளில் சேர்ந்து படிக்க விருப்பம் காட்டுவதில்லை. குறிப்பாக, மாணவர்களுக்கு வழங்கப்படும்…
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நடக்கும் மாநாட்டிற்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்துவருகின்றனர். கூட்டணி தொகுதி பங்கீடு, பிரச்சாரத் திட்டங்கள் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், கடலூரில் தேமுதிக சார்பில் வரும் ஜனவரி 9ம் தேதி மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் தேமுதிகவினர், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தேமுதிக கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், ஒன்றியம், நகர, கிளை கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணிக்கும், தலைவரை உயிர் மூச்சாய் கொண்டுள்ள அனைத்து தொடர்களுக்கும், என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நமது மாநாட்டை மிக பிரமாண்டமான வெற்றி மாநாடாக அமைத்து…
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்தை நம்பியிருக்கும் நிலையில், பயணிகளின் வசதி மற்றும் அமைதியான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்திய ரயில்வே முக்கியமான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது இரவு 10 மணி விதி ஆகும். இந்த விதியின் நோக்கம், நீண்ட தூரம் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இரவில் போதுமான மற்றும் நிம்மதியான உறக்கத்தைப் பெறுவதை உறுதி செய்வதே ஆகும். இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ரயில் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்குப் பிறகு சக பயணிகளுக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படாது. குறிப்பாக, பயணிகள் தங்கள் செல்போன்களில் ரீல்ஸ் பார்ப்பது அல்லது அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், பயணத்தின் போது சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த விதிகளை மீறி, யாரேனும் அதிக சத்தமாகப் பேசுவதன்…
இன்ஜின் இல்லாத ரயில் என அதிமுகவை கலாய்த்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இன்னும் அப்டேட் ஆகவில்லை என்றும், அதிமுக புல்லட் ரயில் போல வேகமாக இயங்கி கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கு விருப்பமனு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. இதனை ஒட்டி தமிழக முழுவதும் உள்ள அதிமுக நிர்வாகிகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வரைவோலை (டிடி) கொடுக்கப்பட்டு விருப்பு மனு நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி ஜெயக்குமார், கோகுல இந்திரா, கேபி முனுசாமி, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுவதற்கும், முன்னாள் அமைச்சர்கள் அவரவர் போட்டியிடுவதற்கான விருப்பு மனுவை பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை…
இந்தியாவில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் விரைவில் முழுமையாக நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கும் திட்டத்திற்கு பதிலாக, ‘விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாதம்’ (VB-G RAM G) என்ற பெயரில் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த புதிய மசோதாவின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், கிராமப்புறக் குடும்பங்களுக்குச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்படும் வேலைவாய்ப்பு நாட்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு சாதகமான அம்சமாக பார்க்கப்பட்டாலும், இந்த புதிய சட்டத்தின் கீழ் மாநில அரசுகளின் செலவினங்கள் அதிகரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய…
இந்தியாவில் இளம் வயதினரிடையே (18-45 வயது) ஏற்படும் திடீர் மரணங்கள் குறித்த அச்சம் நிலவும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஓர் ஆண்டுக் கால ஆய்வு, இந்த மரணங்களுக்கான முக்கிய காரணிகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. கரோனரி தமனி நோய் (Coronary Artery Disease) தொடர்ந்து முக்கிய காரணியாக இருந்தாலும், இந்தத் திடீர் மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் இடையில் அறிவியல் ரீதியான எந்த தொடர்பும் இல்லை என்பதை இந்த ஆய்வு உறுதியாக நிரூபித்துள்ளது. இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணங்களுக்கான காரணம் குறித்துப் பொதுமக்களிடம் நிலவும் குழப்பம் மற்றும் வதந்திகளுக்கு மத்தியில், எய்ம்ஸ் மருத்துவர் டாக்டர் சுதீர் அரவா, ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சிகள் மூலம் பொதுமக்களின் புரிதலுக்கு வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இளம் வயதினரிடையே திடீர் மரணங்கள் ஏற்படுவது, ஏற்கனவே இருக்கும் இதயம் சார்ந்த அல்லது பிற மருத்துவக் காரணங்களால் தான் ஏற்படுகின்றன என்பதை இந்த ஆய்வு தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.…
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் . ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகளில் பயணிக்க, ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயில் மாதாந்திர பாஸ் விநியோகம் செய்யப்படுகிறது. அதிலும், இந்த ரூ. 2000 பாஸ் எடுத்துக் கொண்டால் சென்னையில் AC பேருந்துகளிலும், பொதுத்துறை பேருந்துகளிலும், எக்ஸ்பிரஸ் பேருந்துகளிலும், டீலக்ஸ் பேருந்துகளிலும், மினி பஸ்களிலும் மற்றும் இரவு பேருந்துகளிலும் பயணம் செய்ய அனுமதி வழங்குகிறது. இந்த பாஸ் மூலம், பயணிகள் ஒரே மாதத்திற்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும். இந்தநிலையில், ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000 மதிப்புள்ள மாதாந்திர பயணச் சீட்டுகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கினைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாநகர பேருந்துகளில் நாள்தோறும் பயணம் செய்யும் சுமார் 70,000 மாதாந்திர பயண அட்டைதாரர்களுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…
பயிர்களுக்கு எப்போது இழப்பீடு வழங்குவீர்கள்?. திட்டமிட்டு ஏமாற்றாதீர்கள்!. அன்புமணி ராமதாஸ் கேள்வி!.
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், இனியும் தாமதிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. லட்சக்கணக்கான உழவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில் கடந்த அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவைப் பயிர்களும், நடவு செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அதன்பின் நவம்பர் இறுதியில் டிட்வா புயல் காரணமாக…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் ஞானசேகரன் மீதான் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலையில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்முறை செய்தார். பல்கலை வளாகத்திலேயே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக, கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன், என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஞானசேகரரின் தாயார் கங்காதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதி ராமன்…
அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜவுக்கு தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலை சந்திக்க அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த அமித்ஷா இன்று தமிழகம் வருகை தர இருந்தார், ஆனால், பல்வேறு குழப்பங்களால் அவரது வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜவும் ஏற்பாடு செய்து வருகிறது. பல இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தவும், அதற்கு மேலிட தலைவர்களை அழைத்து வரவும் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலக பொறுப்பாளருமான அருண் சிங்…