Author: Editor web3
2026 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாமக, அமமுக,தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்களான, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் ,அன்புமணி, டிடிவி தினகரன் , ஜி.கே. வாசன், சண்முகம், ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி, பாரி வேந்தர் உள்ளிட்ட கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரமரின் உரை முக்கியமாக பார்க்கப்பட்டது. கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, பொங்கலுக்கு பிறகு மக்களிடையே ஆனந்தம் நிறைந்திருக்கிறது. சில நாட்களுக்கு பின்னர் தான்,பாரத ரத்னா விருது பெற்ற எம்.ஜி,ஆர் பிறந்த நாளை கொண்டாடினோம். இந்த மேடையில் இருந்து ஏறிக் காத்த ராமனின் திருவடிகளை தலைவணக்குகிறேன் என்றார். அதுமட்டும் இல்லை, அனைவரின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் நலனுக்காக வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார். ”2026 ஆம் ஆண்டின் முதல் தமிழக வருகை…
கொய்யாப்பழம் பெரும்பாலும் சாதாரணமாகக் கருதப்பட்டாலும், வைட்டமின் சி சத்தின் அடிப்படையில் இது பல பழங்களை விடச் சிறந்தது. ஒரே ஒரு கொய்யாப்பழம் உடலுக்குத் தேவையான தினசரி வைட்டமின் சி தேவையை விட அதிகமாக வழங்க முடியும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் சளித் தொற்றையும் குறைக்கக்கூடும். கொய்யாவில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகின்றன. இது சருமத்தை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுடன், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதன் இனிப்புச் சுவை இருந்தபோதிலும், கொய்யாப்பழத்தில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. கொய்யாப்பழத்திலும் அதன் இலைகளிலும் உள்ள சேர்மங்கள், குறிப்பாக சாப்பிட்ட பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரை அளவின் திடீர் உயர்வைத் தடுக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொய்யாப் பழங்களில் செரிமானத்திற்கு அவசியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கலைப் போக்கவும், குடலில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்களை ஆதரிக்கவும் உதவுகின்றன. கொய்யாக்காயில்…
2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காகத் தங்கள் அணி இந்தியாவுக்குப் பயணிக்காது என்பதை வங்கதேச அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வங்கதேசம் தனது போட்டிகளை இந்தியாவில் தான் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெளிவாகக் கூறியிருந்தபோதிலும், வங்கதேசம் அதை நிராகரித்து, அந்தத் தொடரைப் புறக்கணித்துவிட்டது. இப்போது, உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்குப் பதிலாக எந்த அணி இடம்பெறும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்திற்குப் பதிலாக எந்த அணி இடம்பெறும்? டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி இடம்பெறும் என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தத் தொடரில் வங்கதேசம் சி பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஸ்காட்லாந்து அணி அதே சி பிரிவில் சேர்க்கப்படும். இலங்கையில் விளையாட வங்கதேசம் விருப்பம்: வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல் ஒரு அறிக்கையில், வங்கதேச வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாகவும், ஆனால் தங்கள் போட்டிகளை இலங்கையில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வங்கதேச அரசாங்கம்…
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும், மார்ச் 5 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற உள்ளது. மார்ச் 9 ஆம் தேதி வேதியியல், மார்ச் 13 ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம், மார்ச் 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 23 ஆம் தேதி உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 26 ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு மே 8 ஆம் தேதியும் வெளியாகும் என்று…
அரசு ஊழியர்களின் கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து, சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ தங்கமணியின் கேள்விக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் சிறையில் அடைக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கு எதிராக டெஸ்மா, எஸ்மா சட்டங்களை நாங்கள் பயன்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியை போல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை நாங்கள் இரவோடு இரவாக கைது செய்யவில்லை. அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் அதிமுக ஆட்சியில் நடந்தன. அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி பேசியதை யாரும் மறந்துவிட மாட்டார்கள். அரசு ஊழியர்கள் மீது அதிமக ஆட்சியில் ஏன் அக்கறை காட்டவில்லை?. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்ததும் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு ஊழியர்கள்…
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை பவுண்டரி, சிக்சர்கள் மூலம் வென்ற ஹிட்மேன் இப்போது கிரிக்கெட் மைதானத்தைத் தாண்டிய ஒரு மிகச் சிறப்பு கௌரவத்தைப் பெற உள்ளார். டி.ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம் ரோஹித் சர்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்.) வழங்கவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் ஜனவரி 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டத்தை ரோகித் சர்மா பெறுவார். இந்த இந்திய கிரிக்கெட் வீரர், விளையாட்டுத் துறையிலும் உலக அரங்கிலும் அவர் ஆற்றிய சாதனைகளுக்காக கௌரவிக்கப்படவுள்ளார். இந்திய அணியை உலகக் கோப்பை பட்டத்திற்கு வழிநடத்திய சில இந்திய ஆண் கிரிக்கெட் வீரர்களில் ரோஹித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கபில் தேவ் மற்றும் எம்.எஸ். தோனிக்கு பிறகு, உலகக் கோப்பை பட்டத்திற்கு இந்தியாவை வழிநடத்திய மூன்றாவது கேப்டன் ரோஹித் ஆனார். ‘ஹிட்மேன்’ கேப்டன்சியின் கீழ், இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதைத் தொடர்ந்து…
காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் நிகிதா மீது பதியப்பட்ட வழக்கு விசாரணையின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட் மதுரை கிளை, சிபிஐ விசாரணை அதிகாரி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் கடந்த ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படை காவலர்களால் விசாரணை நடத்தப்பட்ட போது ஜூன் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா ,ஆனந்த், பிரபு ,சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனு நீதிபதி…
நாளை பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக, மதுராந்தகத்தில் நாளை (ஜன. 23ம் தேதி) நடைபெறும் பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிரதமர் வருகையை தொடர்ந்து, சென்னை விமான நிலையம் மற்றும் மதுராந்தகத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23ம் தேதி மதியம் 1.15 மணியளவில் புறப்பட்டு, மதியம் 2.15 மணியளவில் பிரதமர் மோடி தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். பின்னர், அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் மதியம் 2.25 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் மதுராந்தகத்துக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். மாலை 3 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றடைகிறார். பின்னர் மாலை 3 மணியிலிருந்து 4.30 மணிவரை மதுராந்தகத்தில் நடைபெறும்…
ஜம்மு – காஷ்மீர் தோடாவில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள கன்னிதோப் பகுதியில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த வாகனத்தில் மொத்தம் 17 வீரர்கள் இருந்தனர். இந்த விபத்தில் 10 வீரர்கள் பலியான நிலையில், 7 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டோடாவில் உள்ள பதேர்வா-சம்பா சாலையில் ராணுவத்திற்குச் சொந்தமான கேஸ்பர் வாகனம் பயணித்துக் கொண்டிருந்தபோது, அது ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த வாகனம் 200 அடி ஆழமுள்ள ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. வீரர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் மீட்புக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று…
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை வெளிப்படையாகப் பாராட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு நாக்பூரில் இருவரும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பேசிய தரூர், பிரதமராக இருப்பதற்கு அடுத்தபடியாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பதுதான் நாட்டில் உள்ள மிகவும் கடினமான பொறுப்புகளில் ஒன்று என்று கூறினார். https://x.com/GautamGambhir/status/2014039384350232901? அதாவது, இந்திய அணி தோற்கும் போதெல்லாம் கம்பீர் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். இந்தநிலையில் கம்பீருக்கு ஆதரவாக சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், இந்தியாவில் மோடிக்கு பின் கடினமான வேலையை செய்பவர் கம்பீர் தான் என்று அவரின் திறமையான தலைமைக்கு தனது பாராட்டுக்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இந்தப் பதவியில், எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கோடிக்கணக்கான மக்கள் கேள்வி கேட்பார்கள் என்றும், இருப்பினும், அந்த அழுத்தங்களுக்குப் பணியாமல் பயிற்சியாளர் அணியை முன்னோக்கி வழிநடத்த வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.…