Author: Editor web3
‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தையும் தெரிவித்து வரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வமும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக, விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ளது. இந்தச் சட்டமுன்வடிவில் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநிலங்களுக்கான ஒதுக்கீடு என்பது மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தொகை, வறுமை ஆகியவற்றின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக குறைவதோடு, வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையக்கூடும். இந்த திட்டத்திற்கான மத்திய நிதி உதவி என்பது 60 விழுக்காடாகவும், மாநில நிதி உதவி என்பது 40…
மெஸ்ஸி நிகழ்வில் கலவரம் நடந்ததை தொடர்ந்து மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது பதவியில் இருந்து விலக முன்வந்துள்ளார் என்று திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்தார். சனிக்கிழமை (டிசம்பர் 13) கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்திற்கு அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வருகையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் . பலர் விலையுயர்ந்த டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர், ஆனால் மெஸ்ஸி வந்தபோது, அவரை அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், விஐபிக்கள் கூட்டம் சூழ்ந்தது . இதனால் பார்வையாளர்கள் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்தை சூறையாடினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனபோது, போலீசார் பெரும் தடியடி நடத்தினர். ஒழுங்கை மீட்டெடுக்க விரைவு அதிரடிப் படை ( RAF ) வீரர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த குழப்பத்தைத் தொடர்ந்து, மெஸ்ஸி திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் தொடர்பாக…
2026 ஐபிஎல் மினி-ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக ₹643 மில்லியன் (ரூ.643 மில்லியன்) பணத்தை வைத்திருக்கிறது. மொத்தம் 13 வீரர்களை வாங்க வேண்டியிருப்பதால், கே.கே.ஆர் தங்கள் அணியை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியது. பலத்த போட்டிகளுக்கு இடையில் கேம்ரூன் கிரீனை கேகேஆர் அணி ரூ.25.20 கோடி வாங்கியது. இதேபோல், சென்னை அணியில் இடம்பெற்றிருந்த, இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானா, ரூ.18 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் விற்கப்பட்டார், இதன் மூலம் அவர் மிகவும் விலையுயர்ந்த இலங்கை வீரராக ஆனார். இதற்கிடையில், தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜேவை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அவரது அடிப்படை விலையான ரூ/2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி, இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட்டை ரூ.2 கோடிக்கு வாங்கியது. KKR அணி நியூசிலாந்தின் ஃபின் ஆலனை ரூ.2 கோடிக்கு வாங்கியது. இரண்டு ஒப்பந்தங்களும் அடிப்படை விலையில் இருந்தன. குயின்டன்…
ஐபிஎல் ஏல வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக கேமரூன் கிரீன் உருவெடுத்துள்ள நிலையில், விற்கப்படாத பல முக்கிய நட்சத்திரங்கள் பட்டியலை பாருங்கள். ஐபிஎல் 2026 ஏலம் கணிக்க முடியாத ஒன்றாக அமைந்தது. கேமரூன் கிரீன் ஏல வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரரானார், அதே நேரத்தில் பல முக்கிய நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார்கள். சிறப்பான ஃபார்மில் இருந்த இந்திய பேட்ஸ்மேன் சர்பராஸ் கானும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. லியாம் லிவிங்ஸ்டோனின் ஏலம் குறித்த யூகங்கள் தவறென நிரூபிக்கப்பட்டன; அவரும் ஏலத்தின் முதல் சுற்றில் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார். ஐபிஎல் 2026 இதுவரை விற்கப்படாத வீரர்கள் பட்டியல்: ஜேக் ஃப்ரேசர் மெகுர்க் பிருத்வி ஷா டெவோன் கான்வே சர்பராஸ் கான் கஸ் அட்கின்சன் ரச்சின் ரவீந்திரன் லியாம் லிவிங்ஸ்டோன் வியன் முல்டர் ஸ்ரீகர் பாரத் ஜானி பேர்ஸ்டோவ் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஜேமி ஸ்மித் தீபக் ஹூடா முஜீப் உர் ரஹ்மான்…
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கேமரூன் கிரீனை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.25.20 கோடிக்கு வாங்கியது. இந்தியன் பிரீமியர் லீக் 2026க்கான மினி ஏலம் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் தொடங்கியது. இந்த மினி ஏலத்தில் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் (பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறந்தவர்) இல்லாததால், கேமரூன் கிரீனுக்கு நிறைய பணம் கொக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், மினி ஏலத்தில் ஒரு நல்ல ஆல்ரவுண்டரைத் தேர்ந்தெருக்க ஆர்வம் காட்டின. இந்தநிலையில், கேமரூன் கிரீனை தங்கள் அணிக்கு எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேகேஆருக்கும் இடையே கடுமையான ஏலப் போர் நடந்தது, இதனால் அவரது ஏலத்தொகை ரூ2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது.ரூ.43.40 கோடி வைத்திருந்த போதிலும், ரூ.25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை சிஎஸ்கே நிறுத்தியது. இதையடுத்து, ரூ.25.20…
மகாத்மா பெயர் நீக்கத்தை கண்டித்து டிச.18ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!. செல்வப்பெருந்தகை அறிவிப்பு!
100 நாள் வேலை திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதை வன்மையாக கண்டிக்கும் வகையில் வரும் 18ம் தேதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் 2004 ஆம் ஆண்டு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற வகையில் கிராமப்புற மக்களிடையே நிலவுகிற வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வகையில் வறுமையை ஒழிக்கின்ற நோக்கத்தில் 2006 ஆம் ஆண்டில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 2009 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் என்று பெயரிடப்பட்டது. கிராமப்புற மக்களின் முன்னேற்றத்திற்காக தமது வாழ்நாளில் பெரும் பகுதியை தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளின் பெயரை அத்திட்டத்திற்கு சூட்டுவது பொருத்தமாக அமைந்தது. கிராமப்புற மக்களின்…
11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முகாந்திரம் இல்லை எனவும் முடித்து வைக்கப்பட்டதாக தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இதுசம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என். ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த…
இந்த ஆண்டுத் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டாலும், முதலீட்டாளர்கள் வெள்ளியையும் பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த உலோகங்களுக்கு இணையாக, தற்போது சந்தையில் தாமிரத்தின் (Copper) விற்பனை சடுதியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் விநியோகக் கவலைகள் தீவிரமடைவதாலும், அமெரிக்காவிற்கு வெளியே தேவை அதிகரிப்பதாலும் தாமிரத்தின் விலை டன்னுக்கு $12,000ஐ நெருங்கி வருகிறது. 2025ஆம் ஆண்டில் இதுவரை தாமிரத்தின் விலை சுமார் 35% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தாமிரத்தின் மதிப்பு உயர என்ன காரணம்..? தாமிரத்தின் தேவை அதிகரிப்பதற்கும் அதன் மதிப்பு உயர்வதற்கும் முக்கியக் காரணம், அதன் பரந்த தொழில்துறை பயன்பாடு ஆகும். தாமிரம் அதிக மின் கடத்துத்திறன் கொண்டிருப்பதால், இது மின் கட்டங்கள், தரவு மையங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் சுத்தமான எரிசக்தி அமைப்புகளுக்கு இன்றியமையாத பொருளாக உள்ளது. அரசாங்கங்களும் நிறுவனங்களும் மின் கட்டமைப்புகளை…
வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவா் திரெளபதி நாளை (டிசம்பா் 17) வருகை தரவுள்ளார். ஸ்ரீ நாராயணி அம்மன், ஆயிரத்து 800 கிலோ வெள்ளி விநாயகா், சொா்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் தரிசனம் திரௌபதி முர்மு தரிசனம் செய்யவுள்ளார். அதனை தொடர்ந்து, தங்கக் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தையும் திரௌபதி முர்மு திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டு வைக்கிறாா். வேலூர் நிகழ்ச்சிக்கு பின் குடியரசுத் தலைவர் திருப்பதி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸார் கடந்த 2 நாட்களாக வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை…
டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் உரையாற்றவுள்ள பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் பல்வேறு நிபந்தனைகளைம் விதிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு சிறிது காலம் நிறுத்தப்பட்ட விஜய்யின் அரசியல் பிரச்சாரத் திட்டமான ஈரோடு மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடிக்கு அருகில், விஜயபுரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு நியமிக்கப்பட்ட இடத்தில் கூட்டம் நடைபெறும். கட்சி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைகள், கூட்டத்தின் இயக்கம் மற்றும் போக்குவரத்து மாற்று திட்டங்களை மனதில் கொண்டு, இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பேரணியை ஏற்பாடு செய்ய அனுமதி கோரி TVK உறுப்பினர்கள் காவல்துறையிடம் முறையான விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர். கட்சி சமர்ப்பித்த தளவாட…